நாடுமுழுவதும் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய யோகாபயிற்றுநர்கள் மாநாட்டில் அவர் பேசும் போது, "நாடுமுழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மேலும், ஆசிரியர் பயிற்சி திட்டங்களிலும் யோகாபயிற்சி சேர்க்கப்படவுள்ளது.
யோகாவை கட்டாய மாக்குவதால் மாணவர்களுக்கு எவ்வகையிலும் சுமை ஏற்படாது. ஏனெனில் 80% மதிப்பெண் செயல் முறை தேர்வில் வழங்கப்பட்டுவிடும். யோகாவை மாணவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என விரும்புகிறேன்.
யோகா பாடத்தில் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு (2016), டெல்லியில் தேசியளவிளான யோகா போட்டி நடத்தப்படும். இதில் வெற்றிபெறும் மாணவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்" என்றார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.