ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிகோரி பிரதமரிடம் வைகோ மனு

 பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின்போது, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் அவர் ஆலோ சித்துள்ளார்.

மதியம் 12 மணியளவில் பிரதமரை சந்தித்த அவர் 20 நிமிடங்கள் அவருடன் உரையாடினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "ஆட்சிப்பொறுப்யேற்ற 14 மாதங்களுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்பேசினேன். விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அடியோடு ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

ஆந்திராவில், செம்மரம் வெட்டியது தொடர்பாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன். சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்றும் தெரிவித்தேன். இந்த சம்பவத்தில், உண்மையை குழி தோண்டி புதைக்க சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டினேன்.

மேலும், நதிநீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக்கோரினேன். இதுதவிர பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தோம். எனது கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலனைசெய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்" என்றார்.

இந்த சந்திப்பின் போது, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிகோரி பிரதமரிடம் வைகோ மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...