மாநிலங் களவையில் இடையூறு இன்றி மசோதாக்கள் நிறைவேறும் வகையில் சீர்திருத் தங்கள் கொண்டுவர வேண்டும்; அது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று பிரதமரானார் நரேந்திர மோடி. தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி அளித்திருந்தார். மக்களவையில் பாஜவுக்கு போதிய உறுப்பினர்கள் இருந்தபோதிலும், மாநிலங்களவையில் போதுமான எம்பிக்கள் இல்லை. இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றும் தற்போதைய நடைமுறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.'ஊழல் தடுப்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடிவதில்லை. மசோதாக்களை நிறைவேற்றுவதில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதாக்களுக்கு ஒருமுறைதான் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். இரண்டாவது அல்லது 3வது முறை எதிர்ப்பு தெரிவிக்க முடியாது' என அருண் ஜெட்லி தெரிவித்தார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.