நியாயவான்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

2016 நவம்பர் எட்டாம் தேதி திடீரென அறிவித்து நடைமுறைப்படுத்திய கள்ளப்பணம் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைதான் இன்றைய எதிர்கட்சிகளின் கொந்தளிப்புகளுக்கு காரணம்! முறைகேடாக பணம் சேர்ப்போரின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது! எனவேதான் நல்ல நல்ல திட்டங்களையெல்லாம் கருப்பு கண்ணாடி போட்டு பார்க்கிறார்கள்!

     சந்தைகளில் விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்க வருவார்கள்! வாங்கவும் வருவார்கள்! இந்த மாட்டை விற்றுவிட்டு இன்னொரு மாடு வாங்கலாம் என்றும் வருவார்கள்! இதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளூர் கசாப்புக்கடைகளுக்காகவும் வாங்குவது உண்டு!

     எதுவுமே அளவோடு இருந்தால் தவறில்லை! சமீப காரணமாக விவசாய மாடுகளை வாங்கி வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்புவது பெரிய தொழிலாக வளர்ந்துவிட்டது! இந்த வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடக்கிறது! ஏற்றுமதி தொழில் நல்லதுதான்! விவசாய மாடுகள் விவசாயிகளுக்கு சந்தையில் வாங்க கிடைக்காதவகையில் ஏற்றுமதியாளர்கள் வாங்கி வெட்டி அனுப்பிவிடும் செயல் தொடர்ந்தால், சந்தையில் விவசாயிக்கு மாடு கிடைக்காத்தால் இயற்கை விவசாயம் பாதிக்கப்படுகிறது, இப்படியே போனால் நம் நாட்டில் இன்னும் இருபதே ஆடுகளில்  மாடுகளே இல்லாமல் போய்விடும் நிலை உள்ளது என இரு புள்ளிவிவரம் கூறுகிறது! எனவே விவசாயிகளின் விவசாய தேவைக்களுக்கான விவசாய மாடுகளை பாதுகாப்பதற்காக, சந்தைகளில் மொத்தமாக வாங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுப்பதற்காக ஒரு ஒழுங்குமுறை திருத்த சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது!

     உள்ளூர் கசாப்புக்கடைகளுக்காக வாங்குவோர் விவசாயி வீடுகளில் வாங்கலாம், அதற்காகவே மாடுகள் வளர்க்கப்படும் விவசாய பண்ணைகளில் வாங்கலாம், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று அந்த ஒழுங்குப்படுத்தும் சட்ட திருத்தத்தில் சொல்லப்படவில்லை! ஆனால் கள்ளப்பணம் மற்றும் கருப்புப்பண ஒழிப்பால் பாதிக்கப்பட்டோர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என சட்டம் சொல்வதாக சொல்லி பொய்யை பரப்புகிறார்கள்! அரசியல்வாதிகளைப்போல பாதிக்கப்பட்டோர் ஊடகத்துறையிலும் அதிகமாக உள்ளனர், எனவே இவர்களின் பொய்க்கு அதிக விளம்பரம் கிடைக்கிறது!

     சீதாராம் செஞ்சூரி தாக்கப்படவில்லை! எதிர்ப்பு தெரிவித்தவர்தான் தாக்கப்பட்டார்! சீத்தாராம் செஞ்சூரி இந்திய ராணுவத்தை இழிவாக பேசியதால்தான் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்! எதிர்ப்பு தெரிவித்தவரை கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்! இந்த சம்பவம் அரசியல் கட்சிகளால் பொய்யாக சொல்லப்படுகிறது! பொய்யான தகவலுக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பும் உள்ளது! எல்லாவற்றிற்கும் காரணம் கள்ளப்பனம் மற்றும் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைதான்!

    குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் நியாவான்கள் வாழமுடியாது! குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் அவர்கள் இப்படி அரசை எதிர்த்து செயல்படத்தான் செய்வார்கள்! இதனை நியாயவான்கள் புரிந்துகொள்ளவேண்டும்!

–குமரிகிருஷ்ணன்  

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...