இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக அதிகரித்துள்ளது

கடந்த 10 ஆண்டில் இந்திய மக்கள்தொகை 18 கோடிக்கும் மேலாக அதிகரித்து 121 கோடியாக அதிகரித்துள்ளது . இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம் ஆகும்.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் 90 ஆண்டுகளில் முதல் முறையாக வளர்ச்சிவிகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

 

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 62.37கோடி ஆண்களும், 58.65கோடி பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர் . 2001-2011 வரையிலான 10 ஆண்டில் மட்டும் 18 கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை உயர்ந்துள்ளது .

2001-ல் 21.15 சதவீதமாக இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2011-ல் 17.64 சதவீதமாக குறைந்துள்ளது .

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். அங்கு 19 கோடியே 90 லட்சம் பேர் இருக்கின்றனர் .லட்சத்தீவில் மிகவும் குறைவான மக்கள்தொகை உள்ளது. அங்கு 64,429 பேர்தான் இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் மக்கள் தொகையை சேர்த்தால் அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகமாகும்.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை நெருக்கம் உள்ள பகுதியாக தில்லியின் வடகிழக்கு பகுதியுள்ளது, ஒரு சதுர-கிலோ மீட்டருக்கு 37,346 பேர் அங்கு வாழ்கின்றனர் . குறைவான மக்கள் தொகை நெருக்கம் அருணாச்சல பிரதேசத்தின் திபங்க் பள்ளத்தாக்கில் இருக்கிறது . அங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார் .

மேலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. கணக்கெடுப்பின்படி சமீபத்திய குழந்தைகள் விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்களாக உள்ளது.

2001-ல் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதத்தில் 2011ல் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது படித்தவர்களின்-எண்ணிக்கை 9.21 சதவீதமாக அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

உலகிலேயே சீனாதான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு.

 

உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதம் பேர் அங்கு உள்ளனர்.இந்தோனேசியா, அமெரிக்கா. வங்கதேசம், பிரேசில், பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள் தொகையும் சீனாவின் மக்கள் தொகையும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...