தேர்தலில் வெற்றி பெறுவதற்க்காக வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்ததாவது .கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்ற இலவசங்களை பாஜக எதிர்க்கிறது. அதற்குப் பதிலாக
மக்களின் வருவாயை உயர்த்த போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்ற பாஜக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
அதிக பணவீக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை நம்ப இயலாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. உடனடியாக நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் காங்கிரஸ் ,திமுக அரசு செய்ததவறுகளின் காரணமாக சாதாரண-மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இயலாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.