இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள இந்தியா, சர்வதேச அளவில் 3வது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையை கொண்டுள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 55வது ஆண்டு கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு பங்கேற்றுள்ளார்.

டாவோஸில் ராம் மோகன் நாயுடு அளித்த பேட்டி:

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ந்து வருகிறது. உலகிலேயே மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக நாம் இருக்கிறோம். அந்த அளவுக்கு விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே அந்த ஆற்றலுடன், இந்தியாவிற்கு அதன் சொந்த பெரிய விமானப் போக்குவரத்து மையம் இருக்க வேண்டும்.

டில்லி நாட்டின் பல்வேறு உள்நாட்டு விமான நிலையங்களுடன் இணைப்பைப் பெற்றுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஒரு போக்குவரத்து மையமாகவும் செயல்படும் திறனை கொண்டிருக்கிறது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் டில்லியை ஒரு பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்து மையமாக நிறுவ விரும்பும் திட்டம் எங்களிடம் உள்ளது. பல்வேறு விமான நிறுவனங்களுடனும் நாங்கள் பேசி வருகிறோம்.

இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...