இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள இந்தியா, சர்வதேச அளவில் 3வது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையை கொண்டுள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 55வது ஆண்டு கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு பங்கேற்றுள்ளார்.

டாவோஸில் ராம் மோகன் நாயுடு அளித்த பேட்டி:

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ந்து வருகிறது. உலகிலேயே மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக நாம் இருக்கிறோம். அந்த அளவுக்கு விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே அந்த ஆற்றலுடன், இந்தியாவிற்கு அதன் சொந்த பெரிய விமானப் போக்குவரத்து மையம் இருக்க வேண்டும்.

டில்லி நாட்டின் பல்வேறு உள்நாட்டு விமான நிலையங்களுடன் இணைப்பைப் பெற்றுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஒரு போக்குவரத்து மையமாகவும் செயல்படும் திறனை கொண்டிருக்கிறது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் டில்லியை ஒரு பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்து மையமாக நிறுவ விரும்பும் திட்டம் எங்களிடம் உள்ளது. பல்வேறு விமான நிறுவனங்களுடனும் நாங்கள் பேசி வருகிறோம்.

இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.