உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள இந்தியா, சர்வதேச அளவில் 3வது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையை கொண்டுள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 55வது ஆண்டு கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு பங்கேற்றுள்ளார்.
டாவோஸில் ராம் மோகன் நாயுடு அளித்த பேட்டி:
இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ந்து வருகிறது. உலகிலேயே மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக நாம் இருக்கிறோம். அந்த அளவுக்கு விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே அந்த ஆற்றலுடன், இந்தியாவிற்கு அதன் சொந்த பெரிய விமானப் போக்குவரத்து மையம் இருக்க வேண்டும்.
டில்லி நாட்டின் பல்வேறு உள்நாட்டு விமான நிலையங்களுடன் இணைப்பைப் பெற்றுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஒரு போக்குவரத்து மையமாகவும் செயல்படும் திறனை கொண்டிருக்கிறது.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் டில்லியை ஒரு பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்து மையமாக நிறுவ விரும்பும் திட்டம் எங்களிடம் உள்ளது. பல்வேறு விமான நிறுவனங்களுடனும் நாங்கள் பேசி வருகிறோம்.
இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறினார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |