சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே; ராம.கோபாலன்

ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கபட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்மிருக்கும் அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே. மகாராஷ்டிராவில் “ராலேகான் சிந்தி’ என்ற கிராமத்தில் வியத்தகு சாதனையை செய்துகாட்டியவர் .

நமதுநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஊழலைப்புரிந்தவர்கள் காங்கிரஸ் கூட்டணியினர் என்பது வெட்ட -வெளிச்சமான உண்மை!

“லோக்பால்’ என்ற ஊழல் விசாரணை அமைப்பை உருவாக்கிய தருணத்தில், இந்த லோக்பால் விசாரணைவரம்பிற்குள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சேர்க்க வேண்டும் என பிரதமராக இருந்த வாஜ்பாயும், குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் வலியுறுத்தினார்கள்.

இதனைக்கண்டு அஞ்சிய காங்கிரஸ் மற்றும் சில-கட்சிகள் இந்த மசோதாவை நிறைவேற்ற வெளிப்படையான ஆதரவைத்தெரிவிக்காமல் இழுத்தடித்தன.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆகாஷ் வீட்டு வசதி ஊழல் என்று அடுக்கடுக்கான ஊழல்கள் வெளிவந்ததுடன், இதனை விசாரிக்கும் எந்தவிசாரணை அதிகாரத்திற்க்குள்ளும் பிரதமர் வரமாட்டார் என்ற நிலையும், அரசியல்வாதிகளை தண்டிக்க இயலாது என்ற நிலையும் இருப்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
நாட்டின் ஊழலை ஒழிக்கவும், ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படவும் லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இந்த லோக்பால் வரம்பிற்குள் ஜனாதிபதி, பிரதமர், உட்பட அனைவரும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்றஉண்ணாவிரதத்தை துவக்கி இன்று 4நாட்கள் ஆகிறது.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு பின்பு ஒருபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்கியுள்ள தலைவர் அண்ணா ஹசாரே. நாடுமுழுவதும் அவரது கருத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், தேசபக்தர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லா தரப்பிலும் ஆதரவு பெருகிவருகிறது.

இந்து முன்னணி சார்பாக திருப்பூரில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது .அண்ணா ஹசாரேவின் கோரிக்கையை இழுத்தடிக்காமல் உடனடியாக மத்தியஅரசு ஏற்க வேண்டும். இந்த உண்ணாவிரதத்தினால் அவரது உடல்நிலை மோசமாகிவிட கூடாது, அவரது சேவை நாட்டிற்கு தேவை! ஊழல் அரசியல்வாதியையும் தண்டிக்கும் வகையில் உடனே கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். அதுவரை இந்த தர்ம யுத்தம் ஓயாது என ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...