சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே; ராம.கோபாலன்

ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கபட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்மிருக்கும் அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே. மகாராஷ்டிராவில் “ராலேகான் சிந்தி’ என்ற கிராமத்தில் வியத்தகு சாதனையை செய்துகாட்டியவர் .

நமதுநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஊழலைப்புரிந்தவர்கள் காங்கிரஸ் கூட்டணியினர் என்பது வெட்ட -வெளிச்சமான உண்மை!

“லோக்பால்’ என்ற ஊழல் விசாரணை அமைப்பை உருவாக்கிய தருணத்தில், இந்த லோக்பால் விசாரணைவரம்பிற்குள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சேர்க்க வேண்டும் என பிரதமராக இருந்த வாஜ்பாயும், குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் வலியுறுத்தினார்கள்.

இதனைக்கண்டு அஞ்சிய காங்கிரஸ் மற்றும் சில-கட்சிகள் இந்த மசோதாவை நிறைவேற்ற வெளிப்படையான ஆதரவைத்தெரிவிக்காமல் இழுத்தடித்தன.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆகாஷ் வீட்டு வசதி ஊழல் என்று அடுக்கடுக்கான ஊழல்கள் வெளிவந்ததுடன், இதனை விசாரிக்கும் எந்தவிசாரணை அதிகாரத்திற்க்குள்ளும் பிரதமர் வரமாட்டார் என்ற நிலையும், அரசியல்வாதிகளை தண்டிக்க இயலாது என்ற நிலையும் இருப்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
நாட்டின் ஊழலை ஒழிக்கவும், ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படவும் லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இந்த லோக்பால் வரம்பிற்குள் ஜனாதிபதி, பிரதமர், உட்பட அனைவரும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்றஉண்ணாவிரதத்தை துவக்கி இன்று 4நாட்கள் ஆகிறது.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு பின்பு ஒருபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்கியுள்ள தலைவர் அண்ணா ஹசாரே. நாடுமுழுவதும் அவரது கருத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், தேசபக்தர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லா தரப்பிலும் ஆதரவு பெருகிவருகிறது.

இந்து முன்னணி சார்பாக திருப்பூரில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது .அண்ணா ஹசாரேவின் கோரிக்கையை இழுத்தடிக்காமல் உடனடியாக மத்தியஅரசு ஏற்க வேண்டும். இந்த உண்ணாவிரதத்தினால் அவரது உடல்நிலை மோசமாகிவிட கூடாது, அவரது சேவை நாட்டிற்கு தேவை! ஊழல் அரசியல்வாதியையும் தண்டிக்கும் வகையில் உடனே கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். அதுவரை இந்த தர்ம யுத்தம் ஓயாது என ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...