பத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமை ஷர்மிளா தாகூருக்கு. அது 1966-ம் ஆண்டு. அனுபமா, வக்த் படங்களின் வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார் 20 வயது ஷர்மிளா. அப்போது 'பிலிம்பேர்' பத்திரிகையின் 'சுதந்திர' தினச் சிறப்பிதழின் அட்டைக்கான படம் எடுக்கப்படுவதற் காக புகைப்படக்
கலைஞர் தீரஜ் சாவ்தாவின் அலுவலகத்துக்கு வந்தார் ஷர்மிளா. 'என்ன ஆடை அணியப் போகிறீர்கள்?' என்று கேட்டார் புகைப்படக் கலைஞர்.
தனது கைப்பையில் இருந்து 'டூ பீஸை' பதற்றமின்றி எடுத்துவைத்தார் ஷர்மிளா. அந்தப் படம் பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஷர்மிளாவின் 'டூ பீஸால்' ஏற்பட்ட 'அழகு நடுக்கம்', பாராளுமன்றம் வரை உணரப்பட்டது. பின்னாளில், அதே ஷர்மிளா தாகூர், சென்சார் போர்டின் தலைவரானது விந்தையான நகைச்சுவை தான்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.