பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபின்னர் மழை நிவாரணம் வழங்க நடவடிக்கை

மோடி இந்தியா திரும்பியபின்னர் தமிழகத்துக்கு மழைநிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக. தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார்.


‘உலக மீனவர்தின விழாவை’ முன்னிட்டு தமிழக பாஜக. மீனவர் அணிசார்பில் ‘நமோ (நரேந்திர மோடி) மீன்’ மற்றும் மீன் உணவு திரு விழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, மீனவர் அணி மாநிலதலைவர் எஸ்.சதீஷ் குமார் தலைமை தாங்கினார்.‘நமோ மீன்’ கண்காட்சி மற்றும் மீன் உணவு திரு விழாவை, பா.ஜ.க.  அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தொடங்கிவைத்தார்.

விழாவில், நண்டு சூப், வஞ்சிரம் மீன் வறுவல், இறால் பக்கோடா போன்ற மீன்வகை உணவுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, முரளிதர ராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன் பிடிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மீனவர்கள், மீனவமகளிர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய வகையில் திட்டங்கள் நிறைவேற்றபட உள்ளது.

தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாஜக. குழு தற்போது பார்வையிட்டு ஆய்வுநடத்தி வருகிறது.

பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபின்னர் தமிழகத்துக்கு தேவையான மழை நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...