சகிப்பின்மை விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக ஹரியாணா மாநில சுகாதாரம், விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கக்கூடாது என்று பாகிஸ்தான் நினைக்கிறது. ஆதலால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் வாய்ப்புகளை முறியடிக்கும் வகையிலான சூழ் நிலையை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
இதை கருத்தில்கொண்டே, இந்தியாவில் சகிப்பின்மை விவகாரத்தை எழுப்பும் சதித்திட்டம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பாக இந்தியாவில் சிலர், சகிப்பின்மை விவகாரத்தை எழுப்பி வருகிறார்கள். சகிப் பின்மை விவகாரம் தொடர்பாக ஹிந்திநடிகர் ஆமீர் கான் தெரிவித்த கருத்துகள், தேவையற்றது. தவறான நேரத்தில் அந்தகருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தரஇடம் அளிக்கப்படுவது தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துவருகிறார். அவரது ஆற்றல் மிக்க தலைமையை, மதச்சார்பற்ற சக்திகள் என்று தங்களை தாங்களே அறிவித்து கொள்வோரால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை என்றார் அனில் விஜ்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.