தனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழும் கரும்புள்ளி

தனி நபருக்கு தீங்கு விளை விப்பது, சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் நம் அனவருக்கும்  வைக்கப்படும் கரும்புள்ளி’’ ‘‘நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒற்றுமை, நல்லிணக்கம் போன்றவை தான் ஒரே வழி’’

‘‘பாகிஸ்தானுக்கு போ’’, என ஒருசிலர் முரண்பட்ட கருத்து தெரிவிப்பதால், நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் தேச பக்தி பற்றி யாரும் கேள்வி எழுப்பமுடியாது. இதற்காக யாரும் சான்றளிக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஒற்றுமை, நல்லிணக்கம் என்பது இந்தியாவின் பாரம் பரியம். அதை நாம் தொடர்வதோடு ஒற்றுமையை மேலும் வலுவாக்க வேண்டும்.

இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில், ஒருமைப் பாடின்மை பற்றி பல சாக்குகள் கூறலாம். தேசம் ஒற்றுமையாக விளங்கு வதற்கான வழிகளை கண்டறியவேண்டும். மக்களிடையே சமஉரிமை, கருணை நிலவவேண்டும். நம்மிடம் உள்ள சக்தி தான், மற்றவர்களிடமும் உள்ளது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற வேண்டி, எதிர்க் கட்சிகளுக்கும் மதிப்பு கொடுத்து சமரச அணுகு முறையை எல்லா விஷயங்களிலும் அரசு கடை பிடித்து வருகிறது. தேசத்தின் நலனுக்காக இவ்வாறு அணுகு முறை கடைபிடிப்பதை இடித்துரைக்கும் முயற்சிகள் தேவையற்றது. மூத்த உறுப்பினர்கள் அடங்கிய மாநிலங்களவைக்கு நான் அதிகமுக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

மசோதாக்கள் நிறைவேற, மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை மிகவும் இன்றியமையாதது. மக்களவை, மாநிலங்களவை என இருஅவைகளும் ஒன்று பட்டு கூட்டாக செயல்பட வேண்டும். இதை ஜவஹர்லால் நேருவும் சுட்டிக் காட்டி உள்ளார். அவை நடவடிக்கைகளை, இந்த நாடு உற்று நோக்கி கொண்டிருக்கிறது. எந்த ஒரு தனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழுந்த கரும்புள்ளி ஆகும். அதன் வேதனையை நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். மீண்டும் இதுபோல் நிகழாமல் உறுதிசெய்ய வேண்டும். நாட்டில் நிகழும் எல்லா சம்பவங்களையும் அரசியலாக்கும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

நமது முன்னோர் விட்டுச்சென்ற பாவங்களை, தவம்செய்து போக்கி, சமூக நீதியை நிலைநாட்ட, புதிய தலைமுறை தயாராகவேண்டும். நமது அரசியலமைப்பு ஒருசட்டம் மட்டும் அல்ல. அது சமூக ஆவணமாகவும் உள்ளது. அதை நாம் மதிக்கவேண்டும்.

சகிப்பின்மை பற்றி நடைபெற்ற விவாதங்களுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில்  நேற்று பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...