தனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழும் கரும்புள்ளி

தனி நபருக்கு தீங்கு விளை விப்பது, சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் நம் அனவருக்கும்  வைக்கப்படும் கரும்புள்ளி’’ ‘‘நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒற்றுமை, நல்லிணக்கம் போன்றவை தான் ஒரே வழி’’

‘‘பாகிஸ்தானுக்கு போ’’, என ஒருசிலர் முரண்பட்ட கருத்து தெரிவிப்பதால், நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் தேச பக்தி பற்றி யாரும் கேள்வி எழுப்பமுடியாது. இதற்காக யாரும் சான்றளிக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஒற்றுமை, நல்லிணக்கம் என்பது இந்தியாவின் பாரம் பரியம். அதை நாம் தொடர்வதோடு ஒற்றுமையை மேலும் வலுவாக்க வேண்டும்.

இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில், ஒருமைப் பாடின்மை பற்றி பல சாக்குகள் கூறலாம். தேசம் ஒற்றுமையாக விளங்கு வதற்கான வழிகளை கண்டறியவேண்டும். மக்களிடையே சமஉரிமை, கருணை நிலவவேண்டும். நம்மிடம் உள்ள சக்தி தான், மற்றவர்களிடமும் உள்ளது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற வேண்டி, எதிர்க் கட்சிகளுக்கும் மதிப்பு கொடுத்து சமரச அணுகு முறையை எல்லா விஷயங்களிலும் அரசு கடை பிடித்து வருகிறது. தேசத்தின் நலனுக்காக இவ்வாறு அணுகு முறை கடைபிடிப்பதை இடித்துரைக்கும் முயற்சிகள் தேவையற்றது. மூத்த உறுப்பினர்கள் அடங்கிய மாநிலங்களவைக்கு நான் அதிகமுக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

மசோதாக்கள் நிறைவேற, மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை மிகவும் இன்றியமையாதது. மக்களவை, மாநிலங்களவை என இருஅவைகளும் ஒன்று பட்டு கூட்டாக செயல்பட வேண்டும். இதை ஜவஹர்லால் நேருவும் சுட்டிக் காட்டி உள்ளார். அவை நடவடிக்கைகளை, இந்த நாடு உற்று நோக்கி கொண்டிருக்கிறது. எந்த ஒரு தனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழுந்த கரும்புள்ளி ஆகும். அதன் வேதனையை நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். மீண்டும் இதுபோல் நிகழாமல் உறுதிசெய்ய வேண்டும். நாட்டில் நிகழும் எல்லா சம்பவங்களையும் அரசியலாக்கும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

நமது முன்னோர் விட்டுச்சென்ற பாவங்களை, தவம்செய்து போக்கி, சமூக நீதியை நிலைநாட்ட, புதிய தலைமுறை தயாராகவேண்டும். நமது அரசியலமைப்பு ஒருசட்டம் மட்டும் அல்ல. அது சமூக ஆவணமாகவும் உள்ளது. அதை நாம் மதிக்கவேண்டும்.

சகிப்பின்மை பற்றி நடைபெற்ற விவாதங்களுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில்  நேற்று பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...