தனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழும் கரும்புள்ளி

தனி நபருக்கு தீங்கு விளை விப்பது, சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் நம் அனவருக்கும்  வைக்கப்படும் கரும்புள்ளி’’ ‘‘நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒற்றுமை, நல்லிணக்கம் போன்றவை தான் ஒரே வழி’’

‘‘பாகிஸ்தானுக்கு போ’’, என ஒருசிலர் முரண்பட்ட கருத்து தெரிவிப்பதால், நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் தேச பக்தி பற்றி யாரும் கேள்வி எழுப்பமுடியாது. இதற்காக யாரும் சான்றளிக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஒற்றுமை, நல்லிணக்கம் என்பது இந்தியாவின் பாரம் பரியம். அதை நாம் தொடர்வதோடு ஒற்றுமையை மேலும் வலுவாக்க வேண்டும்.

இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில், ஒருமைப் பாடின்மை பற்றி பல சாக்குகள் கூறலாம். தேசம் ஒற்றுமையாக விளங்கு வதற்கான வழிகளை கண்டறியவேண்டும். மக்களிடையே சமஉரிமை, கருணை நிலவவேண்டும். நம்மிடம் உள்ள சக்தி தான், மற்றவர்களிடமும் உள்ளது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற வேண்டி, எதிர்க் கட்சிகளுக்கும் மதிப்பு கொடுத்து சமரச அணுகு முறையை எல்லா விஷயங்களிலும் அரசு கடை பிடித்து வருகிறது. தேசத்தின் நலனுக்காக இவ்வாறு அணுகு முறை கடைபிடிப்பதை இடித்துரைக்கும் முயற்சிகள் தேவையற்றது. மூத்த உறுப்பினர்கள் அடங்கிய மாநிலங்களவைக்கு நான் அதிகமுக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

மசோதாக்கள் நிறைவேற, மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை மிகவும் இன்றியமையாதது. மக்களவை, மாநிலங்களவை என இருஅவைகளும் ஒன்று பட்டு கூட்டாக செயல்பட வேண்டும். இதை ஜவஹர்லால் நேருவும் சுட்டிக் காட்டி உள்ளார். அவை நடவடிக்கைகளை, இந்த நாடு உற்று நோக்கி கொண்டிருக்கிறது. எந்த ஒரு தனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழுந்த கரும்புள்ளி ஆகும். அதன் வேதனையை நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். மீண்டும் இதுபோல் நிகழாமல் உறுதிசெய்ய வேண்டும். நாட்டில் நிகழும் எல்லா சம்பவங்களையும் அரசியலாக்கும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

நமது முன்னோர் விட்டுச்சென்ற பாவங்களை, தவம்செய்து போக்கி, சமூக நீதியை நிலைநாட்ட, புதிய தலைமுறை தயாராகவேண்டும். நமது அரசியலமைப்பு ஒருசட்டம் மட்டும் அல்ல. அது சமூக ஆவணமாகவும் உள்ளது. அதை நாம் மதிக்கவேண்டும்.

சகிப்பின்மை பற்றி நடைபெற்ற விவாதங்களுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில்  நேற்று பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...