சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங் கிணைந்த கல்வி மற்றும் வாழ் வாதார பயிற்சி

சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங் கிணைந்த கல்வி மற்றும் வாழ் வாதார பயிற்சிகளை வழங்குவதற்கான 'நயீ மஞ்ஜில்' (புதிய தளம்) திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப் பட்ட பட்ஜெட்டின் போது இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இந்ததிட்டம் குறிப்பாக சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார பயிற்சிகளை வழங்குவதற்காக கொண்டு வரப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட அல்லது மதரஸா போன்ற மதக்கல்வி நிறுவனங்களில் பயின்ற சிறுபான்மையின இளைஞர்களுக்கு, முறையான கல்வி (8 அல்லது 10-ம் வகுப்புவரை) மற்றும் திறன்வளர்ப்பு பயிற்சிகளை வழங்கும் நோக்கில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அருண்ஜெட்லி கூறியிருந்தார். இந்த திட்டத்திற்கு கடந்த வாரம் மத்திய நிதித் துறை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், 'நயீ மஞ்ஜில்' திட்டத்திற்கு மத்திய அமைச் சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட அல்லது மதரஸா போன்ற மதக்கல்வி நிறுவனங்களில் பயின்ற சிறுபான்மையின இளைஞர்களுக்கு, முறையான கல்வி (8 அல்லது 10-ஆம் வகுப்புவரை) மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்கும்நோக்கில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நாடுமுழுவதும் ரூ.650 கோடி மதிப்பில் 5 ஆண்டுகளுக்கு செயல் படுத்தப்பட விருக்கும் இத்திட்டத்துக்கான 50 சதவீத நிதியு தவியை உலகவங்கி வழங்குகிறது. 'நயீ மன்ஜில்' திட்டத்தால் கவரப்பட்ட உலகவங்கி, இதேதிட்டத்தை செயல்படுத்த ஆப்ரிக்க நாடுகளுக்கும் பரிந்துரைப்பது குறித்து பரிசீலித்துவருகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...