எல்லையை பாதுகாப்பதிலும், பயங்கர வாதத்தை ஒடுக்குவதிலும் அதிக முன்னுரிமை

எல்லையை பாதுகாப்பதிலும், பயங்கர வாதத்தை ஒடுக்குவதிலும் மத்திய அரசு அதிக முன்னுரிமை தருகிறது என பா.ஜ.க, தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க, ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆனதைமுன்னிட்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்.


அவர் பேசியதாவது : பொருளாதாரவளர்ச்சி, விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வேகம்காட்டி வருகிறது. விவசாயிகளுக்கு நிவாரணம் தொடர்பான விதிகளை தளர்த்தியும், புயல் உள்ளிட்ட பேரிடர் சம்பவ ங்களுக்கு 33 சதவீதத்துக்கு மேல் நிவாரணம் வழங்கியும் உதவிவருகிறது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசின் மற்றொரு மைல்கல் முத்ராவங்கி திட்டம். இதன் மூலம், குறைந்தவட்டி விகிதத்தில் ஏழை இளைஞர்கள் தொழில் துவங்க கடன்பெறலாம். இத்கு எந்த உத்தரவாதமும் தேவையில்லை.


மேலும், எல்லை பாதுகாப்பிலும், பயங்கர வாதத்தை ஒடுக்குவதிலும் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்துவருகிறது. இதில் சகிப்புத்தன்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2013-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச்பகுதியில் இந்திய ராணுவ வீரர் ஹேம ராஜின் தலையை துண்டித்து, பாக்., ராணுவத்தினர் தொங்கவிட்டனர். அது போன்ற செயல்களை தற்போது அவர்களால் தைரியமாக செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...