தூய்மை இந்தியா திட்டத்திற்கு, உலகவங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி

தூய்மை இந்தியா திட்டத்திற்கு, உலகவங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க ஒப்புதல்அளித்துள்ளது. மகாத்மா காந்தியடிகளின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு, 2014ம் ஆண்டில் காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 02ம் தேதி கோலாகலமாக துவக்கியது.


இந்ததிட்டத்தை மக்களிடம் சேர்க்கும் வண்ணம், கமல், அமீர்கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் தூதர்களாக நியமி்க்கப்பட்டனர். தூயமை இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தூயமை இந்தியா திட்டத்தின் முக்கியநோக்கமே, அனைவருக்கும் சுகாதாரமான வாழ்வை அளிப்பதே ஆகும்.


உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்வதேச அளவில், 2.4 பில்லியன் மக்கள் சுகாதாரமற்ற வாழ்க்கையையே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் 750 மி்ல்லியனுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வசித்துவருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசித்து வருகின்றனர்.


500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் திறந்தவெளியில்தான் மலம்கழித்து வருகின்றனர். இதன்காரணமாக, அவர்களுக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்பட்டு அவர்கள் இளம் வயதிலேயே மரணத்திற்கு ஆட்படுகின்றனர். இந்தியாவில், பத்தில் ஒருவர், சுகாதார குறைவினால் மரண மடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டுமக்களுக்கு சுகாதாரவசதிகள் முழுமையாக கிடைக்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் வெற்றிபெறுவதற்கு ஏதுவாக, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...