உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்தது.

 உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், உலகளாவிய வர்த்தக நடை முறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

 பல்வேறு நாடுகளிடையேயான சரக்கு போக்கு வரத்து நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப் பட்டுள்ளது.

 இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தில்லியில் புதன் கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப் பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 அவற்றில் வர்த்தக எளிமையாக்கல் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்ததும் ஒன்றாகும். அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப் படுவதைக் கண்காணிக்க மத்திய வருவாய் மற்றும் வர்த்தக துறைச்செயலர்கள் அடங்கிய தேசியக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

 இதை மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 ஆயுஷ் அமைச்சக ஒப்பந்தம்: இந்தியப் பாரம்பரிய மருத்துவசிகிச்சை முறைகளை சர்வதேச அளவில் கொண்டுசேர்க்கும் நோக்கில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர் வேதம், சித்தா, யோகா, யுனானி ஆகியவை குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

 அதுதொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், பயிலரங்கங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு சார்பில் நடத்தப்படும்.

 மத்திய கொள்கை குழுவின் (நீதி ஆயோக்) தலைவர், தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக செயல்படுவதற்கு மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது. திட்டக்குழு அமலில் இருந்தபோது, அதன்செயலர் தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கும் நடைமுறை இருந்தது. திட்டக்குழுவுக்கு மாற்றாக தற்போது கொள்கை குழு நடைமுறையில் இருப்பதால் மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...