உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்தது.

 உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், உலகளாவிய வர்த்தக நடை முறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

 பல்வேறு நாடுகளிடையேயான சரக்கு போக்கு வரத்து நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப் பட்டுள்ளது.

 இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தில்லியில் புதன் கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப் பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 அவற்றில் வர்த்தக எளிமையாக்கல் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்ததும் ஒன்றாகும். அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப் படுவதைக் கண்காணிக்க மத்திய வருவாய் மற்றும் வர்த்தக துறைச்செயலர்கள் அடங்கிய தேசியக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

 இதை மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 ஆயுஷ் அமைச்சக ஒப்பந்தம்: இந்தியப் பாரம்பரிய மருத்துவசிகிச்சை முறைகளை சர்வதேச அளவில் கொண்டுசேர்க்கும் நோக்கில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர் வேதம், சித்தா, யோகா, யுனானி ஆகியவை குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

 அதுதொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், பயிலரங்கங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு சார்பில் நடத்தப்படும்.

 மத்திய கொள்கை குழுவின் (நீதி ஆயோக்) தலைவர், தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக செயல்படுவதற்கு மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது. திட்டக்குழு அமலில் இருந்தபோது, அதன்செயலர் தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கும் நடைமுறை இருந்தது. திட்டக்குழுவுக்கு மாற்றாக தற்போது கொள்கை குழு நடைமுறையில் இருப்பதால் மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...