உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்தது.

 உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், உலகளாவிய வர்த்தக நடை முறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

 பல்வேறு நாடுகளிடையேயான சரக்கு போக்கு வரத்து நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப் பட்டுள்ளது.

 இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தில்லியில் புதன் கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப் பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 அவற்றில் வர்த்தக எளிமையாக்கல் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்ததும் ஒன்றாகும். அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப் படுவதைக் கண்காணிக்க மத்திய வருவாய் மற்றும் வர்த்தக துறைச்செயலர்கள் அடங்கிய தேசியக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

 இதை மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 ஆயுஷ் அமைச்சக ஒப்பந்தம்: இந்தியப் பாரம்பரிய மருத்துவசிகிச்சை முறைகளை சர்வதேச அளவில் கொண்டுசேர்க்கும் நோக்கில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர் வேதம், சித்தா, யோகா, யுனானி ஆகியவை குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

 அதுதொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், பயிலரங்கங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு சார்பில் நடத்தப்படும்.

 மத்திய கொள்கை குழுவின் (நீதி ஆயோக்) தலைவர், தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக செயல்படுவதற்கு மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது. திட்டக்குழு அமலில் இருந்தபோது, அதன்செயலர் தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கும் நடைமுறை இருந்தது. திட்டக்குழுவுக்கு மாற்றாக தற்போது கொள்கை குழு நடைமுறையில் இருப்பதால் மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...