உலகசுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக மாறும் இந்தியா

இந்தியா உலகசுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலகசுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம் நகரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு உலகசுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமையிடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேசமையமாக திகழும்.

இந்தமையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயுஷ் மருத்துவ முறைகளை உலகம்முழுவதும் பரவச் செய்ய முடியும். அத்துடன் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான சர்வதேசசுகாதார விவகாரங்களில் இந்தியா தலைமை வகிக்கவும் வகைசெய்யும். தரமான, பாதுகாப்பான, நோய்களை குணப்படுத்தக்கூடிய அதிக திறன் கொண்ட மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் பாரம்பரிய மருந்துகளை முறையாக பயன் படுத்தவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகசுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை, குஜராத்தில் உள்ள ஆயுர்வேதபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அதன் இடைக்கால அலுவலகத்துடன் நிறுவுவதற்கான உலக சுகாதார நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இன்று ஆயுஷ்அமைச்சகம் கையெழுத்திட்டது.

இந்நிலையில், இந்தியா உலகசுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், அதிநவீன வசதிகளைக்கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையம், உலகநன்மைக்காக ஒரு ஆரோக்கியமான நல்வாழ்வு நடைமுறைகளை உருவாக்குவதற்கும், நமது பாரம்பரிய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று மோடி கூறியுள்ளார்.

உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை நடைமுறையில் உள்ளதாகவும், 80 சதவிகித மக்கள் பாரம்பரிய மருந்துகளையே பயன்படுத்தி வருவதாகவும் உலக சுகார அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...