அரசியலில் தலையி டுவதை விடுத்து, கல்வியில் கவனம்செலுத்த வேண்டும்

அரசியலில் தலையி டுவதை விடுத்து, கல்வியில் கவனம்செலுத்த வேண்டும் என்று தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பு தலைவர் கன்னையா குமாருக்கு மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய  நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.


 தேசவிரோத வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்ததும் பிரதமர் நரேந்திர மோடியை கன்னையா குமார் விமர்சித்து பேசியுள்ள நிலையில், வெங்கய்ய நாயுடு இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகள் வருமாறு:


 கன்னையா குமார் வியாழக்கிழமை பேசியபேச்சுக்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கன்னையா குமாருக்கு இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது; அதை அவரும் அனுபவித்து வருகிறார். பல்கலைக்கழகங்கள், கல்விக்கான இடங்களாகும். அங்கு அரசியலில் ஈடுபடக்கூடாது. கல்வியிலேயே கவனம் செலுத்த வேண்டும்.


 அரசியலில் மாணவர்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில், படிப்பை உதறிவிட்டு, அரசியலில் குதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஓரிடம்கூட பெறாத தனக்கு விருப்பமான அரசியல் கட்சியில் கன்னையாகுமார் சேரலாம் என்று சுட்டுரை பதிவுகளில் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து தில்லி போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...