கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள்

கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தியநிலையில்,கடந்த 6ம் தேதி 3 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிபயணம் மேற்கொண்டார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது, கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் பிரதமர்மோடியின் சித்தாந்தத்தையும், தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய, எந்த தலைவர்களாக இருந்தாலும் பாஜகவில் இணையலாம். இணைந்த அனைத்துதலைவர்களும் தேசியம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளனர்.

ஒரு அரசியல்கட்சியில் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. அது நடக்கட்டும் பதில் கூறுகிறேன் என தெரிவித்தார். அரசியலில் ஒருஇடத்தில் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மக்களுக்கு சேவைசெய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது. பாஜகவில் யாருவந்தாலும் மகிழ்ச்சிதான். முக்கியமாக பாஜகவின் சித்தாந்த அடிப்படையில் வரவேண்டும் என கூறினார்.

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடீரென இன்று விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.

மேகதாது விவகாரம்தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, மேகதாது விவகாரம் முடிந்து விட்டது என்றும் மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அணைகட்ட முடியாது என்பதை மத்திய அரசு தெளிவுப் படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

One response to “கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...