ஆதார் அட்டை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும்

ஆதார் அட்டை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

கிராமங்களை இணைக்கும் பிரதமரின் தடை யில்லா போக்குவரத்து திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஏழைகளுக்கு உதவும்திட்டம் உள்ளிட்ட கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.


 இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கும்பணியை மேலும் துரிதப்படுத்த புதுமையான சிறந்த நடைமுறைகள் பின்பற்றப் படுவதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.


 சாலைகளை அமைக்கும் போது அதன் தரம் குறித்து 3 நிலைகளில் கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.


 அவை சாலை அமைப்பதற்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்யும் போதும், சாலையை அமைக்கும்போதும், அவற்றை பராமரிக்கும் போதும் தரம் குறித்து சோதனை நடத்தவேண்டும்.  மகளிர் சுய உதவிக் குழுக்களில் 3 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆதார்அட்டை மூலம் வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க வேண்டும். சுய உதவி குழுக்களுக்கான கடன்வழங்கும் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால், அந்த கடன்தொகை உண்மையான பயனாளிகளிடம் சென்றுள்ளதா? என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...