உலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது; ‘டைம்’ பத்திரிகை

உலகளவில் செல்வாக்கு மிக்கவர்களாக ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தேர்வுபட்டியலில் பிரதமர் மோடி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.


அமெரிக்காவின் பிரபலபத்திரிகையான ‘டைம்’ வாரப்பத்திரிகை, உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்தபட்டியலில் இடம் பிடிப்பதை புகழ் மிக்கதாக அனைவரும் கருதுகின்றனர்.

இந்தபத்திரிகை கடந்தாண்டு வெளியிட்ட 100 பேர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதில் மோடியின் சுயவிவரங்களை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுதியிருந்தது அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.

 

அதன்படி இந்த ஆண்டுக் கான பட்டியலை ‘டைம்’ பத்திரிகை அடுத்தமாதம் வெளியிட உள்ளது. இதற்காக 127 பேர் அடங்கிய உத்தேசபட்டியலை அறிவித்துள்ளது. இதில் உலக தலைவர்கள், சிந்தனையாளர்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த பட்டியலில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி குறித்து அந்தபத்திரிகை கூறுகையில், ‘உலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது. உலக பொருளாதார வளர்ச்சியில் அவரது நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது’ என செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த 127 பேரில் இருந்து சிறந்த 100 பேரை தேர்ந்தெடுக்க டைம் பத்திரிகையின் வாசகர்கள் ஓட்டளிப் பார்கள். அதன் அடிப்படையில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பெயர்களை பத்திரிகை நிர்வாகம் முடிவுசெய்து அடுத்தமாதம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...