65 சுங்கச் சாவடிகள் மோடி ஆட்சியில் மூடப்பட்டது என்பதை ராமதாஸ் உணர வேண்டும்

சுங்கச் சாவடிக் கட்டணம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சட்ட விரோதமானது என விமர்சனம் செய்துள்ளார்.
 
இந்தக் கட்டண உயர்வானது 2007-ஆம் ஆண்டுச் சட்டங்களின் படி ஒப்பந்தம் போடப்பட்டதாகும். அப்போது மத்திய அமைச்சரவையில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றிருந்தார். இதை ராமதாஸ் மறந்துவிட்டாரா? மறைத்துவிட்டாரா?
 
இது சட்ட விரோதம் என்றால், அந்தச் சட்ட விரோதமான அமைச்சரவையில் அன்புமணி பங்கு பெற்றதை ராமதாஸ் ஏற்றுக் கொள்கிறாரா?
 
கடந்த என்.டி.ஆ ஆட்சியில் 6 வருடங்களுக்கு மட்டும் எனப் போடப்பட்ட ஒப்பந்தங்கள், பாமக இடம் பெற்றிருந்த உபி.ஏ அரசால் 25 வருடங்கள் என மாற்றப்பட்டதை ராமதாஸ் மறந்துவிட்டாரா? மறைத்துவிட்டாரா?
 
ஒப்பந்தகள் காலாவதியான பிறகும் நான்கு / ஆறு வழிப் பாதைகள், பாலங்கள் என்கிற அடிப்படையில் 25 வருடங்களுக்கு ரத்து செய்ய முடியாத படி புதிய ஒப்பந்தங்களைப் போட்டது பாமக அங்கம் வகித்த உபிஏ என்பதை ராமதாஸ் மறைக்கிறாரா? மறுக்கிறாரா?
 
சென்ற 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சுங்கச் சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டதாகச் சொல்லியிருப்பதை ராமதாஸ் நிரூபிக்க முடியுமா?
 
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் எந்த சுங்கச் சாவடிக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ராமதாஸின் குற்றச்சாட்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது.
 
இந்தியா முழுவதும் 120 சுங்கச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு இரு தமிழகச் சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட 65 சுங்கச் சாவடிகள் மோடி ஆட்சியில் மூடப்பட்டது என்பதை ராமதாஸ் உணர வேண்டும்.
 
உண்மை தெரியாமல், யாராலோ எழுதிக் கொடுக்கப்படும் அறிக்கைகளை இனி ராமதாஸ் வெளியிடாமல் இருப்பது நல்லது.
 

 

என்றும் தாயகப் பணியில்
எஸ்.ஆர்.சேகர்

மாநிலப் பொருளாளர்
செய்தித் தொடர்பாளர

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...