காங்கிரஸின் தவறான கொள்கைகளால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் காணப்படுகிறது

காங்கிரஸின் தவறான கொள்கை களால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் காணப் படுவதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் கிரிராஜ்சிங் குற்றம்சாட்டினார்.

 கடந்த மக்களவைத் தேர்தலின் போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று பாஜக அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான பணிகளை மோடி அரசு விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 இது குறித்து உத்தரப்பிரதேச மாநிலம், பலியாவில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: திறமையான நபர்கள் 70 சதவீதம்பேரை கொண்ட நாடுகள் வேகமாக முன்னேறி சென்றுள்ளன. கடந்த காங்கிரஸ் ஆட்சி கடைப் பிடித்து வந்த தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மோடி அரசு பதவியேற்றபோது, திறமையான இளைஞர்களின் சதவீதம் வெறும் 2.5-ஆக இருந்தது.

 தற்போது 2016-17-ஆம் நிதியாண்டில் வேலை வாய்ப்புகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வேலையி ல்லாதோருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் பணிகளை மத்திய அரசு விரைவில்தொடங்கும்.
 கடந்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, நிதீஷ்- லாலு கூட்டணி ஆட்சிக்குவந்தால், அது காட்டாட்சியாக இருக்கும் என்று பாஜக மக்களை எச்சரித்தது. அதற்கேற்ப, எம்எல்ஏ.,க்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. எங்கள் கட்சி அஞ்சியது தற்போது உண்மையாகி உள்ளது என்றார் கிரிராஜ் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...