காங்கிரஸின் தவறான கொள்கை களால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் காணப் படுவதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் கிரிராஜ்சிங் குற்றம்சாட்டினார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று பாஜக அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான பணிகளை மோடி அரசு விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து உத்தரப்பிரதேச மாநிலம், பலியாவில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: திறமையான நபர்கள் 70 சதவீதம்பேரை கொண்ட நாடுகள் வேகமாக முன்னேறி சென்றுள்ளன. கடந்த காங்கிரஸ் ஆட்சி கடைப் பிடித்து வந்த தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மோடி அரசு பதவியேற்றபோது, திறமையான இளைஞர்களின் சதவீதம் வெறும் 2.5-ஆக இருந்தது.
தற்போது 2016-17-ஆம் நிதியாண்டில் வேலை வாய்ப்புகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வேலையி ல்லாதோருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் பணிகளை மத்திய அரசு விரைவில்தொடங்கும்.
கடந்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, நிதீஷ்- லாலு கூட்டணி ஆட்சிக்குவந்தால், அது காட்டாட்சியாக இருக்கும் என்று பாஜக மக்களை எச்சரித்தது. அதற்கேற்ப, எம்எல்ஏ.,க்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. எங்கள் கட்சி அஞ்சியது தற்போது உண்மையாகி உள்ளது என்றார் கிரிராஜ் சிங்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.