மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்

ஹைதராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி படிப்புமாணவர் ரோஹித் வேமூலாவின் தற்கொலை விவகாரத்தில், அடிப்படை பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விரும்பவில்லை, இதைவைத்து அரசியல் ஆதாயம் தேடவே விரும்புகின்றனர் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார்.


 இது குறித்து அவர், ஹைதராபாதின் புறநகர்ப் பகுதியான பெளரம்பேட்டை கிராமத்தில் புதன் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:


 ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ரோஹித் வேமூலாவுக்கு முன்பு, 10 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். எதிர்க் கட்சிகளின் மொழியில், அவர்களில் சிலர் தலித்துகள். ஆனால், அரசியல் தலைவர்கள் யாரும் அப்போது வரவில்லை. யாரும் இரங்கல் தெரிவிக்க வில்லை. ஏனென்றால், அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால், கடந்த ஜனவரிமாதம் ரோஹித் வேமூலா தற்கொலை செய்துகொண்ட போது, அவர்கள் அனைவரும் புனிதயாத்திரை வருவதுபோல் வந்தனர்.


 அத்தகைய தற்கொலை நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெறாமல் தடுத்து, சமூக நல்லிணக் கத்தை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, பிரதமர் நரேந்திரமோடி மீது குறைகூறுவதிலேயே எதிர்க்கட்சிகள் முனைப்பாக உள்ளன.


 அடிப்படை பிரச்னை என்ன? ரோஹித் வேமூலா தற்கொலைக்கு ஏன் முயன்றார்?, குற்றச்சாட்டுகள் சரியானவையா? பிரச்னைக்கு தீர்வுகாண்பது எப்படி? என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு பதிலாக, "மோடி' என்ற வார்த்தையை மட்டுமே அவர்கள் உச்சரித்தனர்.


 அரசியலில் இருந்து, ஜாதிகளும், மதங்களும் விலகியிருக்க வேண்டும். அரசியல் ஆதாயங் களுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் நடவடிக்கைகளில் அரசியல்கட்சிகள் ஈடுபடுகின்றன. மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயமாகும். கோயில்களில் பெண்கள் நுழைவதற்கு தடையில்லாத அனுமதிவழங்கப்பட வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.