2-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 200 நகரங்களில் சாதனை விளக்க நிகழ்ச்சி

நரேந்திரமோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நாடுமுழுவதும் 200 நகரங்களில் சாதனை விளக்க நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க ஏற்பாடுசெய்துள்ளது. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்துகொள்கிறார்.

நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறை வடைகின்றன. இதையொட்டி, மத்திய அரசு சார்பில் மட்டுமின்றி, ஆளும் பா.ஜ.க சார்பிலும் நாடுமுழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பா.ஜனதா பொதுச் செயலாளர் அனில் ஜெயின் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:-

மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி, பா.ஜ.க சார்பில் நாடுமுழுவதும் 200 நகரங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 27-ந் தேதி தொடங்கி, ஜூன் 15-ந் தேதிவரை இந்த நிகழ்ச்சிகள் நடக்கும். முதல் நிகழ்ச்சியாக, உத்தரபிரதேச மாநிலம் சஹாரன் பூரில் 26-ந் தேதி (இன்று) நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்ட சபை தேர்தல் நடப்பதால், பிரதமரின் பொதுக் கூட்டத்துக்கு அம்மாநிலத்தை தேர்வுசெய்துள்ளோம். மறுநாள் (27-ந் தேதி) மேகாலயாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். அன்றையதினம், கட்சிதலைவர் அமித் ஷா, பத்திரிகையாளர்களுடன் உரையாடுவார்.

200 நகரங்களில் நடைபெறும் சாதனைவிளக்க நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பொதுக்கூட்டங்களாகவே அமையும். அத்துடன், மத்திய அரசின் திட்டங்களால் பலன் அடைந்தவர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருடனான சந்திப்பாகவும் அமையும். அந்தந்த பகுதியில் உள்ள அறிவு ஜீவிகளுடன் உரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

எல்லா நிகழ்ச்சிகளிலும், அரசின்சாதனைகள் விளக்கிச் சொல்லப்படும். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி மனோகர்பாரிக்கர் கலந்து கொள்வார்.

இந்த நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட தலா 3 பேர் அடங்கிய 33 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இக்குழுக்களில் மத்திய கேபினட் மந்திரிகள், இணை மந்திரிகள், மூத்த தலைவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், பா.ஜ.க எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் அவரவர் தொகுதியில் ஒரு நாள் இரவு தங்கி, மத்திய அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை கீழ்மட்டளவில் விளக்கிச்சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், கட்சியின் தேசியசெயற்குழு ஜூன் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறும் இவ்வாறு அனில் ஜெயின் கூறினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...