அரசு பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான் கருவி

அரசு பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான்கருவி பொருத்துவது கட்டாயமாக்கப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி அறிவிக்கை வெளியிட இருக்கிறது.
 ராஜஸ்தான் மாநில அரசு போக்கு வரத்து கழகத்தால் அவசர கால பொத்தான்கள், சிசிடிவி காமராக்கள் பொருத்தப்பட்ட புதிய 10 சொகுசுபேருந்துகள் மற்றும் 10 சாதாரண பேருந்துகள் விடப்பட்டன. இதை தில்லியில் புதன் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:


 தில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கும்பல் ஒன்றால் கடந்த 2012ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த துரதிருஷ்ட வசமான சம்பவத்தைத் தொடர்ந்து, பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது.
 ஆதலால் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான் கருவி, சிசிடிவி காமரா, வாகனநடமாட்டத்தை கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பொருத்துவதை கட்டாயமாக்குவதென்று மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.


 நாடுமுழுவதும் மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் மேற்கண்ட சாதனங்கள் அனைத்தையும் கட்டாயமாக பொருத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவிக் கையை மத்திய அரசு வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியிட இருக்கிறது. பேருந்தை கட்டமைக்கும் போதே அந்தக் கருவிகளையும் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசுவிரும்புகிறது. இந்த சாதனங்கள் அனைத்தையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் போது, அவற்றின் விலையும் குறையும்.


 அரசு பேருந்துகளில் பயணம்செய்யும் பெண்கள் தங்களுக்கு துன்பம் நேரிடும் பட்சத்தில், அந்தப் பேருந்துகளில் இருக்கும் அவசர கால எச்சரிக்கை பொத்தானை அவர்கள் அழுத்தவேண்டும். அப்போது, ஜிபிஎஸ் கருவியுடன் உதவியுடன் அந்தப் பேருந்து எந்தப் பகுதியில் செல்கிறது என்ற தகவல் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு செல்லும். எச்சரிக்கைபொத்தானை பெண்கள் அழுத்தியதும், பேருந்தில் நடைபெறும் காட்சியை சிசிடிவி காமரா பதிவு செய்து நேரலையாக அந்தக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதேவேளையில், பேருந்து தான் செல்லும் பாதையில் இருந்து விலகி வேறு பாதையில் சென்றாலும், அந்த தகவலும் காவல் துறைக்கு ஜிபிஎஸ் கருவி மூலம் தெரிந்து விடும்.

இதன் மூலம் காவல்துறையினர் விரைந்து வந்து, பொத்தானை அழுத்திய பெண்களின் குறைகளைக் கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.  இந்தநடவடிக்கைகள் அனைத்தும் அமலுக்கு வந்ததும், பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை அந்தக்கருவிகளே உறுதி செய்யும் என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...