தனது தொலை நோக்குப் பார்வையால் கவர்ந்த மோடி

அமெரிக்க நாடாளு மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, தனது பேச்சாற்றல், தொலை நோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலமாக, தன்னை விமர்சனம்செய்த உறுப்பினர்களையும் கவர்ந்து விட்டார்.

அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றினார்.

அவரது உரையை ரசித்த நாடாளுன்ற உறுப்பினர்கள், சுமார் 40 முறை கரவொலி எழுப்பினர். சிலமுறை எழுந்து நின்று தங்களது ஆதரவை வெளிப் படுத்தினர்.

இந்நிலையில், மோடியின் உரை குறித்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக் குழுத்தலைவர் பாப் கார்க்கர், வியாழக் கிழமை கூறியதாவது:

இந்தியாவுடன் அமெரிக்கா ஏன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது என்பதை மோடியின் உணர்ச்சிப் பூர்வமான உரையின் மூலம் அறிய முடிந்தது. உண்மையில், இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார ரீதியிலான உறவு முன்பை விட வலுவாக உள்ளது. எதிர் காலத்தில் இது மேலும் வலுப்படும் என்றார் பாப் கார்க்கர்.

எனினும், நாடாளு மன்றத்தில் கடந்த மாதம் பேசிய பாப்கார்க்கர், ஒபாமா நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதேபோல், இந்தியாவில் மனித உரிமைப்பிரச்னைகள் இருப்பதாக, 2 வாரங்களுக்கு முன் விமர்சனம் செய்த அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக்குழு உறுப்பினர் பென் கார்டின், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிக நண்பர்களை பிரதமர் மோடி பெற்று விட்டதாகப் புகழாரம் சூட்டினார். உலக நன்மைக்காக, இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றவேண்டும் என மோடி அழைப்பு விடுத்திருப்பது முக்கியமான விஷயம் என்றும் பென்கார்டின் கூறினார்.

இதேபோல், அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக் குழுவின் மற்றொரு தலைவரான எட் ராய்ஸ் கூறுகையில், "இந்தியா நெகிழ்வுத் தன்மையற்ற அண்டை நாட்டை கொண்டிருப்பதை மோடியின் உரைமூலமாக நாங்கள் புரிந்து கொண்டோம்' என்றார்.

ஆசியக்கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா இருக்கவேண்டும் என்பதில் அமெரிக்க நாடாளுமன்றம் இனி கூடுதல்கவனம் செலுத்தும் என்று மற்றொரு உறுப்பினரான எலியட் ஏங்கல் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...