தனது தொலை நோக்குப் பார்வையால் கவர்ந்த மோடி

அமெரிக்க நாடாளு மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, தனது பேச்சாற்றல், தொலை நோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலமாக, தன்னை விமர்சனம்செய்த உறுப்பினர்களையும் கவர்ந்து விட்டார்.

அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றினார்.

அவரது உரையை ரசித்த நாடாளுன்ற உறுப்பினர்கள், சுமார் 40 முறை கரவொலி எழுப்பினர். சிலமுறை எழுந்து நின்று தங்களது ஆதரவை வெளிப் படுத்தினர்.

இந்நிலையில், மோடியின் உரை குறித்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக் குழுத்தலைவர் பாப் கார்க்கர், வியாழக் கிழமை கூறியதாவது:

இந்தியாவுடன் அமெரிக்கா ஏன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது என்பதை மோடியின் உணர்ச்சிப் பூர்வமான உரையின் மூலம் அறிய முடிந்தது. உண்மையில், இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார ரீதியிலான உறவு முன்பை விட வலுவாக உள்ளது. எதிர் காலத்தில் இது மேலும் வலுப்படும் என்றார் பாப் கார்க்கர்.

எனினும், நாடாளு மன்றத்தில் கடந்த மாதம் பேசிய பாப்கார்க்கர், ஒபாமா நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதேபோல், இந்தியாவில் மனித உரிமைப்பிரச்னைகள் இருப்பதாக, 2 வாரங்களுக்கு முன் விமர்சனம் செய்த அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக்குழு உறுப்பினர் பென் கார்டின், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிக நண்பர்களை பிரதமர் மோடி பெற்று விட்டதாகப் புகழாரம் சூட்டினார். உலக நன்மைக்காக, இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றவேண்டும் என மோடி அழைப்பு விடுத்திருப்பது முக்கியமான விஷயம் என்றும் பென்கார்டின் கூறினார்.

இதேபோல், அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக் குழுவின் மற்றொரு தலைவரான எட் ராய்ஸ் கூறுகையில், "இந்தியா நெகிழ்வுத் தன்மையற்ற அண்டை நாட்டை கொண்டிருப்பதை மோடியின் உரைமூலமாக நாங்கள் புரிந்து கொண்டோம்' என்றார்.

ஆசியக்கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா இருக்கவேண்டும் என்பதில் அமெரிக்க நாடாளுமன்றம் இனி கூடுதல்கவனம் செலுத்தும் என்று மற்றொரு உறுப்பினரான எலியட் ஏங்கல் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...