ஒரேசமயத்தில் மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவுதெரிவித்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பான விவாதத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும் என்றும் அந்த கடிதத்தின் வாயிலாக அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
காலவிரயம் மற்றும் செலவு களைக் குறைக்கும் வகையில் மக்கள வைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தி யிருந்தார். இந்த ஆலோசனைக்கு அதிமுக, அஸ்ஸாம் கண பரிஷத், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதேவே ளையில், இந்த ஆலோசனை, நடைமுறையில் செயல்படுத்த முடியாத ஒன்று எனக்கூறி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இந்தவிவகாரம் தொடர்பாக சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அமித் ஷா கடிதம் எழுதியிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரின் ஆலோசனையை செயல்படுத்து வதற்கான சாத்தியக் கூறுகளை தேர்தல் ஆணையம் ஆராயவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அமித்ஷா கேட்டுக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.