அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ஊழல் வழக்கில் கைது

டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் உள்பட 5 பேர் ஊழல்வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர்.
 
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரி வாலின் செயலாளர் அலுவலகம் உள்பட தலைமைசெயலக வளாகத்தில் பல இடங்களில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் படியே தனது அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
 
இதனை மறுத்த சி.பி.ஐ., முதல்–மந்திரி அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை. முதல்மந்திரியின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அலுவலகத்தில் தான் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ. கூறியது.

 

அன்றைய தினமே அரசு அதிகாரிகளான இந்திய நுண்ணறிவு தகவல்தொடர்பு நிறுவனத்தின் (ஐ.சி.எஸ்.ஐ.எல்.) நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.கவுஷிக், முன்னாள் இயக்குனர்கள் ஏ.கே.துக்கல், ஜி.கே.நந்தா, என்டீவர் சிஸ்டம்ஸ் என்ற தனியார்நிறுவன இயக்குனர்கள் சந்தீப்குமார், தினேஷ் கே.குப்தா மற்றும் சிலர்மீது சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்தது. குற்றச்சதி, தவறான நடவடிக்கை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது.

 
இந்நிலையில், நேற்று டெல்லி முதல்மந்திரியின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரை சி.பி.ஐ. ஊழல் வழக்கில் கைதுசெய்தது. அவருக்கு உறுதுணையாக இருந்ததாக அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனத்தினர் 4 பேரையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.
 
இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘‘ராஜேந்திர குமார் டெல்லி அரசின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். 2007 முதல் 2014–ம் ஆண்டுவரை அவர் வகித்த பதவிகளில் இருந்தபோது ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு பணிகளை முறை கேடாக என்டீவர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இதற்கு சில அதிகாரிகளும் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். டெல்லி அரசுக்கு இதனால் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு ரூ.3 கோடிக்குமேல் லஞ்சமாக வழங்கப் பட்டுள்ளது’’ என்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...