பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயா வதியை, தரக்குறைவாக விமர்சித்த, உ.பி. மாநில பா.ஜ., துணைத்தலைவர் தயா சங்கர் சிங்கை 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்செய்த பா.ஜ., இச்செயலுக்காக, பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளது.
உ.பி., மாநில பா.ஜ., துணைத்தலைவர், தயா சங்கர் சிங், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு, மாயாவதி சீட்டைவிற்பது, பாலியல் தொழிலாளியை விட மோசமானது என சர்ச்சை கருத்துதெரிவித்திருந்தார். இவரது இப்பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும்கண்டனம் தெரிவித்தன. ராஜ்யசபாவிலும், இந்தவிவகாரம் எதிரொலித்தது.
சர்ச்சை பேச்சுக்காக மாயா வதியிடம் சங்கர்சிங் பகிரங்க மன்னிப்புகேட்ட போதிலும் உ.பி., மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து, சங்கர்சிங்கை பா.ஜ., தலைமை நீக்கியது. இதனிடையே பா.ஜ., தேசியதலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், தயாசங்கர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முடிவுசெய்யப்பட்டது. இதனையடுத்து சங்கர்சிங் கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் உ.பி., மாநில பா.ஜ., தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.