அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அன்னியநேரடி முதலீடு(எப்.டி.ஐ.) செய்வதில் அதிகஆர்வம்

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அன்னியநேரடி முதலீடு(எப்.டி.ஐ.) செய்வதில் அதிகஆர்வம் காட்டுகின்றன என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி வாஷிங்டனில் தெரிவித்தார்.  மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி ஒரு வார காலபயணமாக அமெரிக்காசென்றார் . அவர் வாஷிங்டனில் தனது பயணத்தை நிறைவுசெய்தார். அப்போது அவர்  அளித்த பேட்டியில்,  அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுசெய்ய அதிகம் ஆர்வம் கொண்டுள்ளன.அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில்  அதிகளவு முதலீடுசெய்ய விதிமுறைகளை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது சாலைகட்டமைப்பு பணிகளில் முனைப்பு காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற உள்கட்டமைப்பு பணிகளில் அன்னிய நிறுவனங்கள் அதிகமுதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு வாரகால அமெரிக்க பயணத்தில் முதலீட்டாளர்களுடன் நடத்திய கலந்துரை யாடல் நல்ல பலனை அளித்துள்ளது. இந்தியாவின் உள்கட்ட மைப்பு மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி அதிகமுன்னுரிமை தந்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே மிக சிறப்பான நல்லுறவு நிலவுகிறது. உள்கட்டமைப்பு துறைகளான சாலைகள் அமைத்தல், நெடுஞ்சாலை , கப்பல்துறைகளில் நேரடி அன்னிய முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் காற்று மாசற்ற போக்குவரத்தை ஊக்கப்படுத்துவதை மத்திய அரசு  தனதுபணியாக கொண்டுள்ளது. பயோ எத்தனால், இயற்கை எரிவாயு, எத்தனால், மின் வாகனங்களால் காற்று மாசடைவது தடுக்கப்படும்.எனவே இத்தகைய போக்குவரத்தை எங்கள் அரசு ஊக்குவிக்கிறது.இவ்வாறு அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...