அரவிந்த் கேஜரிவால் முன்வைத்த விமர்சனங்கள் தரம்தாழ்ந்தவை

பிரதமர் நரேந்திரமோடி குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்வைத்த விமர்சனங்கள் தரம்தாழ்ந்தவை என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்காக அக்கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த்கேஜரிவால், தனது பேச்சு அடங்கிய ஒருவிடியோ பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை சகித்துகொள்ள முடியாமல் பிரதமர் மோடி எத்தகைய எல்லைக்கும் செல்வார்; என்னை கொல்லவும் அவர் தயங்க மாட்டார் என கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

இது நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், கேஜரிவாலின் இந்தப்பேச்சுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேஜரிவால் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவை, பொறுப்பற்ற வகையிலும் உள்ளன. இதுஅவரது கீழ்த்தரமான மோதல்போக்கு அரசியலையே காட்டுகிறது.

ஊழல் உள்பட ஏதேனும் சர்ச்சைகளில் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியினர் தினமும் அகப்படுவதால் ஏற்பட்டவிரக்தியில் அவர் இவ்வாறு கருத்துகளை தெரிவித்துவருகிறார்.

கேஜரிவாலின் இந்தப்பொறுப்பற்ற பேச்சால் உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான நன்மதிப்பு குறையக்கூடும். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டை கேஜரிவால் கேலிக் கூத்தாக்கியிருக்கிறார்.

பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளையும் அவர் காயப்படுத்தியுள்ளார்.

மக்களுக்கு சேவையாற்றுவதே முதல்வர்களின் அடிப்படை கடமை. இதனைவிடுத்து, இவ்வாறு தரம்தாழ்ந்த அரசியலை கடைப்பிடிப்பதை கேஜரிவால் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதில் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...