சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதி

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.

ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிந்து விட்டதால் ஆந்திரத்துக்கு புதிய தலைநகர் உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தில்லிசென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.

அப்போது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்பட மாநிலத்துக்குத் தேவையான பல்வேறு உதவிகள் குறித்து மோடியிடம், சந்திரபாபுநாயுடு கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச்சந்தித்த அவர் கூறியதாவது:

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால்மட்டுமே மாநில மக்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதை பிரதமரிடம் எடுத்துரைத்தேன். இந்தவிஷயம் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார் என்றார் நாயுடு.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஆந்திரத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அண்மையில் மக்களவையில் தெரிவித்தார். இது ஆந்திர மாநிலத்தில் பெரும்எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக எதிர்க்கட்சிகள் இந்தவிவகாரத்தை கையில் எடுத்து சந்திரபாபுநாயுடு அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. இதனால் மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான பாஜக.,வுக்கும், தெலுங்கு தேசத்துக்கும் பின்னடைவு ஏற்படும் என்பதையும் மோடியிடம் சந்திரபாபுநாயுடு விளக்கியுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...