சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதி

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.

ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிந்து விட்டதால் ஆந்திரத்துக்கு புதிய தலைநகர் உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தில்லிசென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.

அப்போது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்பட மாநிலத்துக்குத் தேவையான பல்வேறு உதவிகள் குறித்து மோடியிடம், சந்திரபாபுநாயுடு கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச்சந்தித்த அவர் கூறியதாவது:

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால்மட்டுமே மாநில மக்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதை பிரதமரிடம் எடுத்துரைத்தேன். இந்தவிஷயம் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார் என்றார் நாயுடு.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஆந்திரத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அண்மையில் மக்களவையில் தெரிவித்தார். இது ஆந்திர மாநிலத்தில் பெரும்எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக எதிர்க்கட்சிகள் இந்தவிவகாரத்தை கையில் எடுத்து சந்திரபாபுநாயுடு அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. இதனால் மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான பாஜக.,வுக்கும், தெலுங்கு தேசத்துக்கும் பின்னடைவு ஏற்படும் என்பதையும் மோடியிடம் சந்திரபாபுநாயுடு விளக்கியுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...