சவுதியில் இப்போது பொருளாதாரம் ஆட ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் அவர்கள் சில காலம் தாக்குப் பிடிப்பார்கள் என்றாலும், சவுதி சம்மந்தமாக நான் படிக்கும் செய்திகள் அவ்வளவு உற்சாகபப்டுத்துவதாக இல்லை..
சவுதியில் வீம்புக்காக கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள்..ஈரான் நிறுத்தாவிட்டால் தாங்களும் நிறுத்தப் போவதில்லை என்று..
ஈரான் இப்போது தான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீங்கி கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறார்கள். ஈரான் தடை செய்யப்பட்ட காலத்தில், கச்சா எண்ணெய் சந்தையில் நல்ல அறுவடை செய்தவர்கள் சவுதி.
இப்போது எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு அடிப்படை காரணம், சவுதி.
இதனால் கட்டடத் தொழில் அங்கே பாதிக்கப்பட்டு வருகின்றன என்றும் நிறைய ஆசிய ஊழியர்கள்- இந்தியா- பாகிஸ்தான் குறிப்பாக- மிகவும் கஷ்டப்படுகிறார்கள்..என்றும் அடிக்கடி கண்ணில் படுகிறது.
அவர்களுக்கு 8, 10 மாதங்களாக சம்பளம் வரவில்லை என்றும், மளிகை கடைகளில் கடனுக்கு வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றும், சவுதி அரசாங்கம் சரியாக பணம் பட்டுவாடா கட்டட ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் சரி வர தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்றும் கனடா ஊடகத்தில் படித்தேன்.
இந்த நிலையில்- வர வேண்டிய பணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள். இந்தியாவுக்கு வாருங்கள் என்று துணிச்சலுடன் அழைப்பு விடுத்திருக்கிறார், சுஷ்மா ஸ்வராஜ்.
அது தான் மோடி அரசாங்கம்!.
இந்த நேரத்தில் இப்படி ஆறுதலாய் சொல்லத் தான் யார் இருக்கிறார்கள்? இதற்கு முன் யார் தான் இப்படி இருந்தார்கள்?
சௌதிக்கு தரகர் மூலமாக பணம் கொடுத்து ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று சவுதிக்கு செல்வது சர்வ முட்டாள்தனம்.
நான் ஊதும் சங்கை ஊதி விட்டேன்..
நன்றி ஸ்ரீ கருடால்வான்
You must be logged in to post a comment.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
makkal namadu nadukku kandippaka thirumpum neram vanthu vittathu enpathe unmai. Muslim nadukal amathihai verumpa mattarkal enpathu unmai.ethirkalam eni indhiyavirkku mattume.
Valka Baratham Velka Baratham
jagadeesan