தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்புத்திட்டத்தின் கீழ், ஐந்து மாநிலங்கள் வழியாகச் செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடுசெய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேசிய நெடுஞ் சாலைகள் இணைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (என்.ஹெச்.ஐ.ஐ.பி.) கீழ், கர்நாடகம், பிகார், ஒடிஸா,ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வழியாகச்செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடுசெய்ய, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல் படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இருவழி சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக இந்தநிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், நிலம் கையகப்படுத்துதல் கட்டணம், மறுகுடியேற்றம், புனரமைப்பு, முன்கட்டுமானம் ஆகிய நடவடிக்கைகளுக்காக இந்தநிதி செலவிடப்படும்.
இந்தத் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு, 429 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கட்டுமானப்பணிகள் நிறைவடையும் என்றும், 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பராமரிப்புப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் பின் தங்கிய பகுதிகள் வழியே அமைக்கப்படும் தேசிய நெடுஞ் சாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.