காஷ்மீர் இல்லாமல் இந்தியாவுக்கு எதிர் காலம் இல்லை

காஷ்மீர் இல்லாமல் இந்தியாவுக்கு எதிர் காலம் இல்லை என கூறியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். காஷ்மீர் மாநிலத்தில் புர்ஹானி வானி என் கவுன்ட்டரைத் தொடர்ந்து 48-வது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மாநில முதல்வர் மெஹபூபா முப்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஒரேமாதத்தில் இரண்டாவது முறையாக அவர் காஷ்மீர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மெஹபூபாவுடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத்சிங், "இந்தியாவின் எதிர் காலத்தை வடிவமைக்க விரும்புகிறோம். காஷ்மீர் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு காஷ்மீர் இயல்பாக இல்லா விட்டால் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை.

வாஜ்பாயி வலியுறுத்திய காஷ்மீரியாத், இன்சானியாத், ஜம்மூரியாத் கொள்கைகளை மீண்டும் வலியுறுத்து கிறேன். காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் பன் முக கலாச்சாரம், மனிதநேயம், ஜனநாயகம் பாதிக்கப்படாத வகையில் யாருடன் வேண்டு மானாலும் இந்தியா பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறது.

அதேபோல், பெல்லட் துப்பாக்கிகளுக்கு இன்னும் சிலநாட்களுக்குள் மாற்று கண்டுபிடிக்கப்படும். இதற்காக ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு தனது அறிக்கையை ஓரிரு நாட்களில் சமர்ப்பித்துவிடும். அதன் பின்னர் பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்றுகாணப்படும்.

2010 அரசு அறிக்கையில் பெல்லட் துப்பாக்கிகள் அபாயகரமானது அல்ல என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்றுகண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பெல்லட் துப்பாக்கிகளால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அதே வேளையில் காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெறும் போராட்டங்களில் மத்தியபடையினர் 4000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஷ்மீர் பெருவெள்ளத்தின்போது படையினர் செய்த உதவிகளை மறந்து விடாதீர்கள். காஷ்மீரில் படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும். காஷ்மீரில் படுகொலைகளை யாரும் விருப்பமில்லை.

சிறு குழந்தைகள் கூட கைகளில் கற்களை எடுத்துவீதிகளில் போராடவருகிறார்கள் என்றால் அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்"

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். காஷ்மீர் மாநிலத்தில் பேசியது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...