கர்நாடகாவில் காவிரி பிரச்சினையில் தமிழகவாலிபர் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
கர்நாடகாவில் காவிரி பிரச்சினையில் தமிழகவாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத் தக்கது. சட்டம்–ஒழுங்கு என்பது மாநில அரசின் பிரச்சினை. மத்தியஅரசு மாநிலத்தின் முழுஉரிமையை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் கர்நாடகாவில் ஆளும் மாநில அரசு மறுபடியும் தவறு செய்கின்றனர்.
அதை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக காவிரி பிரச்சினையை வைத்துக்கொண்டு தமிழர்களை தாக்கவேண்டும். அங்குள்ள மக்களின் ஆதரவை பெறவேண்டும் என்ற குறுகியநோக்கத்தோடு கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. கர்நாடகாவில் வாழும்மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது மாநில அரசு.
பஸ்களில் செல்பவர்கள் மாநில எல்லைகளில் 5 கிமீ முன்பாகவே இறக்கி விடப்படுகிறார்கள். பஸ்சில்செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது இருமாநில அரசுகளின் கடமை. தமிழர்களின் பாதுகாப்பு நிச்சயமாக நிலைநிறுத்தப்படவேண்டும்.
தமிழர்கள் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டு உள்ளனர். தமிழர்களுக்கு உரிமையான தண்ணீரில் ஓரளவுதான் வந்துள்ளது. ஆனால் இதை அரசியலாக்கி, வன்முறையாக்கி மிகமோசமான அரசியலை கர்நாடக காங்கிரஸ் அரசு நடத்துகிறது.
தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனைத்துகட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். அதில் தமிழக பாரதீய ஜனதா கட்சி கலந்துகொள்ள தயாராக உள்ளது. அதில் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் தயாராக உள்ளோம். எந்த விதத்திலும் தமிழகம் பாதிப்படைந்து விடக்கூடாது. யார் யாருக்கெல்லாம் எந்த உரிமையோ அந்த உரிமையை பெற்றுதருவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை பெற்றுதருவதில் தமிழக பாஜக கொஞ்சம் கூட பின்னடையாது.
போராட்டங்கள் மட்டுமே தீர்வாகிட முடியாது. நேரிடையாக எந்தந்த வகையில் அணுக வேண்டுமோ அந்தந்த வகையில் தமிழக பாரதீய ஜனதா கட்சி அணுகிகொண்டு இருக்கிறது. நதிநீர் பிரச்சினைக்கு மாற்றாக என்ன செய்யலாம் என்ற கருத்துகளை நாங்கள் கேட்டுவருகிறோம். அதுபற்றிய கருத்தரங்கம் அடுத்த வாரம் நடத்தப்படுகிறது.
சென்னையில் கடந்த ஆண்டு பெய்த பலத்தமழையால் பொதுமக்கள் தத்தளித்தனர். இப்போது அதிகமான மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கையை தாண்டி மழை வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். தற்போது மழைபெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டெங்கு மற்றும் விஷகாய்ச்சல் அதிகமாகி கொண்டு இருக்கிறது. ஒரேநாளில் 49 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.