ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது என்றால், அதன் பின்புலத்தில் மத்தியஅரசு உள்ளது

“காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசை குறைசொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீர் பிரச்னையை பொறுத்தமட்டில் இது வரை ஆட்சி செய்தவர்களும்,

ஆட்சியில் பங்கெடுத்து கொண்டவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் தங்கள்காலத்தில் இதை தீர்ப்பதற்கு எவ்வித தீவிரமுயற்சியும் எடுக்கவில்லை. இன்று இப்பிரச்னையில் மத்திய அரசை குறை சொல்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், தமிழர்களின் உரிமையை காப்பதில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

கர்நாடக அரசிடம் இருந்து உச்சநீதிமன்றம் வாயிலாக ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது என்றால், அதன் பின்புலத்தில் மத்தியஅரசு உள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று சொன்னபோது, போதிய அளவு நீர் இருக்கிறது என்று மத்திய நீர்வள அமைச்சகம் அறிக்கை தாக்கல்செய்தது. அதனால், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. அதையும் மீறி கர்நாடகாவில் போராட்டம் வெடித்த போதும், தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலையிட்டு துணை ராணுவப்படையை அனுப்பியது மட்டுமல்லாமல், கர்நாடக அரசிடம் பேசியபின்புதான் அங்கு நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

அங்கு ஆட்சி செய்வது காங்கிரஸ் அரசாக இருந்தாலும், சட்ட ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும் அதை கட்டுக்குள்வைக்க காங்கிரஸ் அரசு தவறியது உண்மை. ஆனால், வேண்டுமென்றே பாஜவையும், மத்திய அரசையும் குறை கூறுவது ஏற்புடையதல்ல. பிரதமர் நரேந்திர மோடி எந்த அரசியல் காரணத்தாலும் சாமானிய மக்கள் எவ்வித பாதிப்பும் அடையக் கூடாது என்ற தனது கருத்தை வலிமையாக பதிவு செய்திருக்கிறார். அதனால் தமிழர்கள் தாக்கப் பட்டதை கண்டித்தும், தமிழர்கள் நலன் காக்கப்படவேண்டும் என்பதை உணர்த்தியும் இன்று நடைபெறும் முழு அடைப்பிற்கு தமிழக பாஜக முழு ஆதரவு அளிக்கும். அதேநேரத்தில் இந்த முழு அடைப்பின் போது மறியல் மற்றும் வன்முறை போராட்டங்கள் நடத்துவது எங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடியது அல்ல என்பதையும் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...