உடையும் இந்தியா…..முடியுமா?

காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் தந்ததால் ஏற்பட்ட கலவரத்தினால் இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியா உடைந்து சிதறும் என்று திராவிட பக்கிகளும் தமிழ் தேசியத் தற்குறிகளும் உளறி வருகிறார்கள்.

வைகோ மாதிரி முட்டாள் நபர்கள் சும்மா வாயை திறந்தாலே இந்தியா சோவியத் யூனியன் போல சிதறி போகும் என்று சாபம் கொடுப்பார்கள்…… இப்பொழுது கேட்கவா வேண்டும்?

இவர்கள் பேசுவதை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என்று பாரத நாட்டைப் பிரிக்க நினைத்துப் போராடிய ஈவேரா கூட்டம் சுடுகாட்டுக்குள் சமாதியான பொழுது எழுத்து வடிவில் இருந்த திராவிட நாட்டையும் மக்கள் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள்.

1965 ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ன சாதித்தது? நீர்வளத்திலும் தொழில்வளத்திலும் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்கிய காமராஜரைத் தோற்கடித்து தனக்குத்தானே குழிவெட்டி சவமாக படுத்து கொண்டது தமிழகம். அன்று முதல் இன்று வரை கருணாநிதி, வைகோ, வீரமணி போன்றவர்களுக்கு திராவிடம், தனி நாடு என்பது உண்ட மயக்கத்தில் வரும் உளறல்களைப் போல உள்ளதே தவிர உணர்வாக இருந்ததில்லை.

ஆனாலும் இந்தியாவை உடைக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்களே சாட்சி. இது இன்று நேற்று தொடங்கிய நிகழ்வு அல்ல. சுமார் ஐம்பது ஆண்டுகளாக திட்டமிடப்பட்டுச் சரியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மனங்களில் பிரிவினை பாடங்கள் என்னும் விஷம் விதைக்கப்பட்டு வருகிறது.

முற்போக்கு சிந்தனைகளும், மதமாற்ற நிகழ்வுகளும் சுதந்திரத்திற்கு பிறகு அதிகரிக்கக் காரணம் வெள்ளைக்காரனால் துண்டாடப்பட்ட இந்தியாவை மீண்டும் பிளவுபடுத்த, இந்தியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாமல் பிணைந்துள்ள மாயசங்கிலியை அறுப்பதற்கே…..

இந்த சங்கிலியை அறுப்பது என்பது கடல் நீரை வெறும் கை கொண்டு அளப்பது போல……!

29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 22 ஆட்சி மொழிகள், 122 பேச்சு மொழிகள் என்று இந்தியா பிரிந்து இருந்தாலும் அவர்களை இன்றும் இணைத்துக் கொண்டு இருப்பது இந்துமதம்தான். பல்வேறு மாநிலங்களில் வாழ்வாதராமான நீர் பிரச்சனையால் உண்டாகும் பிரிவினை கோஷங்களை அடக்கிக்கொண்டு இருப்பதும் இதே இந்துதர்மம் தான்.

காவிரியும், கங்கையும், யமுனாவும், கிருஷ்ணாவும், கோதாவரியும், மகாநதியும் நீரினாலும் நிலத்தினாலும் வேறுபட்டு நின்றாலும் அவை தோன்றும் இடங்கள் இறைவழிபாட்டுடன் ஒன்றுபட்டு இந்து தர்மத்தின் வாழ்வியலை தங்களின் வழிதடங்களின் வழியாக சொல்லிக் கொண்டு செல்கின்றன..

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று வாதங்கள் பரப்பப்பட்டாலும் வடக்கில் இருந்து தெற்கில் ராமேஸ்வரத்தை நோக்கியும் தெற்கில் இருந்து காசியை நோக்கியும் மக்கள் பயணிக்கும் வரை இந்தியாவை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. ராமேஸ்வரத்தில் இருந்து மணல்
எடுத்து, நீர் எடுத்து காசியில் வீற்றிருக்கும் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வதே "முக்தியடைதலின் முதற்படி" என்கிற இந்து தர்மம் தான் இன்றும் இந்தியாவைக் கட்டி காப்பாற்றி வருகிறது.

கிழக்கே ஒரிஸ்ஸாவில் பூரி ஜகந்நாதரும், மேற்கே குஜராத்தில் துவாரகநாதரும், வடக்கே உத்தரகாண்டில் பத்ரிநாதரும், தெற்கே ராமேஸ்வரத்தில் ராமநாதரும் இணைந்து தரிசிக்கும் (CHAR DHAM) சார்தாம் யாத்திரையின் மூலம் அடையும் பிறவிப்பயன் பெறுதல் என்கிற கண்ணுக்கு தெரியாத நம்பிக்கை தான் இன்றும் இந்தியாவை இணைத்துள்ளதே தவிர வெள்ளைக் காகிதத்தில் உள்ள அரசியல்சாசனங்கள் அல்ல..

மத்திய பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, தமிழ் நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களை இன்றும் இணைத்துக் கொண்டிருப்பது தேசிய நெடுஞ்சாலைகள் அல்ல. பனிரெண்டு ஜோதிர்லிங்க தரிசனம்தான்……!

வாழ்வின் நிறைவு என்கிற இந்துதர்மத்தின் மெய்யியல்தான் இந்த பாரத பூமியை இன்றும் இணைத்துக் கொண்டிருக்கிறது.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை மொழி ரீதியாக பிரிந்து கிடக்கும் என் தாய் தேசத்தினை எங்களின் தாயான உமையவளின் உடம்பில் இருந்து உதிர்ந்த பாகங்களே சக்திபீடங்களாக மாறி இன்றும் இந்த தேசத்தை இணைத்துக் கொண்டு இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

திராவிடன் என்று பெரும் சத்தத்துடன் சொல்லிக் கொண்டு திரிந்த கூட்டத்தினால் முடியாத தமிழ், கன்னட, தெலுங்கு மலையாள ஒற்றுமையை மைசூரின் சாமுண்டீஸ்வரி மலையில் "ம்மா சாமுண்டிஸ்வரி" என்று எதிரொலிக்கும் ஆத்ம ஒலியும், திருப்பதி திருமலையில் ஒலிக்கும் "ஏடுகொண்டல வாலா கோவிந்தா கோவிந்தா", என்கிற கோஷமும், பழனி மலையில் ஒலிக்கும் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்கிற முழக்கத்திலும், சபரிமலையில் எதிரொலிக்கும் "சுவாமியே சரணம் ஐயப்பா" என்கிற சரண கோஷங்களும் சத்தமில்லாமல் சொல்வது என்ன தெரியுமா…. நான் இந்து என்று…!

இங்கே செல்பவர்கள் தமிழன் என்றோ கன்னடன் என்றோ தெலுங்கன் என்றோ மலையாளி என்றோ வங்காளி என்றோ குஜராத்தி என்றோ மராட்டியன் என்றோ அஸ்ஸாமி என்றோ பிகாரி என்றோ சொல்வதில்லை இந்து என்றே சொல்கிறான்….. இந்த உணர்வை நம்மிடம் என்றும் நிலைத்து நிற்க வைத்திருப்பது தான் இந்துத்வா..

கிட்டதட்ட இரண்டு தலைமுறைகளின் வழியே இந்து மதத்தை ஒழித்து இந்தியாவை பிளக்க வெளிநாட்டு நிதிகளின் மூலம் பரப்பப்பட்டு வரும் மதமாற்றங்களும் சித்தாந்தகளும் இன்று முனை மழுங்கி நிற்கிறதே அதற்குக் காரணம் "தேசமே தெய்வம்" என்று ஒலித்துக்கொண்டிருக்கும் "இந்துத்வா என்கிற கொள்கையே"…….!

சோவியத் யூனியன் என்கிற தேசம் கம்யூனிசம் என்கிற தங்கமுலாமினால் கட்டபட்டு இருந்தது. முலாம் வெளிரியதும் கூடாரம் சிதைந்துவிட்டது. ஆனால் இந்தியாவோ இந்துயிசம் என்கிற வாழ்வியல் முறையினால் வடிவமைக்கப்பட்டது. இந்த வாழ்வியல் முறை முடிவுக்கு வர வேண்டுமென்றால் உலகம் முடிவுக்கு வர வேண்டும்…..!

அது வரை நம்முடைய எதிரிகள் காத்திருக்க வேண்டும்.. இருப்பார்களா …..??

நன்றி விஜயகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...