உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். முதலில் அதை உற்றுப்பாருங்கள்.
தேநீர் – ரூ.1.00
சூப் – ரூ. 5.50
பருப்பு – ரூ.1.50
சாப்பாடு ரூ.2.00
சப்பாத்தி – ரூ.1.00
கோழி – ரூ.24.50
தோசை – ரூ.4.00
வெஜ். பிரியாணி – ரூ.8.00
மீன் – ரூ.13.00
விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் இவ்வளவு "மலிவான விலையில்" எங்கே உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்.
ஏழை – எளிய மக்களுக்காக இவ்வளவு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நமது எம்.பி.க்கள் தான் இந்த ஏழை – எளிய மக்கள் ஆவர். நம் நாடாளுமன்றத்தின் உணவகத்தில் தான் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக அரசு கோடிக்கணக்கில் மானியம் அளித்து வருகிறது.
எம்.பி.க்கள் மாதந்தோறும் சம்பளமாக ரூ.80,000/- பெறுகிறார்கள். இதுபோக படிகள் மற்றும் சலுகைகள் என சில லட்சங்களைப் பெறுகிறார்கள். எம்.பிக்களுக்கு இப்படி வாரி வழங்கப்படுகின்ற பணம் எங்கிருந்து வருகிறது? நாம் செலுத்தும் வரியிலிருந்து தன் இவை யாவும் வழங்கப்படுகின்றன.
Tags;இந்தியாவிலேயே, உணவுகள், மிக மலிவான, விலைக்கு, மலிவான, மலிவாக, மலிவான விலையில், மலிவாகக் , மலிவாகவும், மலிவான பொருள், மலிவாய், மலிவானது
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.