பாகிஸ்தானுக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும்

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவ துணைத்தளபதி ரண்வீர் சிங் தெரிவித்தார்.


ஜம்மு-காஷ்மீரின் உரிபகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கர வாதிகள் ஞாயிற்றுக் கிழமை நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தினரின் பதில்தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


இந்த பயங்கரவாதத்தாக்குதல் சம்பவம் குறித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை சந்தித்து விளக்கமளித்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் ஆகியோருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.


மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய ராணுவத் துணைத்தளபதி ரண்வீர் சிங் கூறியதாவது:
இந்திய எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுபகுதிகளில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை இந்தக்கூட்டத்தில் எடுத்துக் கூறினோம். அவற்றை சரிசெய்யும் முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


உரி பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சில பொருள்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்தத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே தீர வேண்டும். பாகிஸ்தானுக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார் ரண்வீர் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...