ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப்பண மீட்பு என்ற இருமுக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்

ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப்பண மீட்பு என்ற இருமுக்கிய வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
தானாக முன்வந்து கருப்புப்பணத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.65 ஆயிரம் கோடி கருப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இதற்குமுன்பு எந்த அரசும் இந்த அளவுக்கு அதிகமான கருப்புப்பணத்தை மீட்டது இல்லை. தானாக முன்வந்து கருப்புப் பணத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.65 ஆயிரம்கோடி மீட்கப்பட்டது மட்டுமல்லாது, கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகள் மூலமும் மொத்தமாக ரூ.1.40 லட்சம் கோடி கருப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்தப்பணம் கிராமப்புற மேம்பாடு, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காக செலவிடப்படும். ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப்பண மீட்பு ஆகிய இரு முக்கிய வாக்குறுதிகளையும் மோடி தலைமையிலான அரசு மிகக்குறுகிய காலத்திலேயே நிறைவேற்றியுள்ளது. கருப்புப்பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.


நிலக்கரிச் சுரங்க ஏலம் மிகவும் வெளிப்ப டையான முறையிலும், எவ்வித முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமலும் நடை பெற்றுள்ளது. பயனாளிகளுக்கு நேரடியாக மானியங்களை வழங்கும் திட்டத்தின் மூலம் அரசுக்  கருவூலத்தில் இருந்து பணம்வீணாக செலவழிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
5 கோடி ஏழைப் பெண்களுக்கு சமையல் எரி வாயு இணைப்பு புதிதாக வழங்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஒருகோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் சமையல் எரி வாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...