லஞ்சம் வாங்கி பணம் சேர்த்து வைத்தவர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்

காவிரி மேலாண்மை வாரியம் சட்டப் பூர்வமாக கொண்டு வரப்படும் என்று தஞ்சையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய கயிறுவாரிய தலைவரும், பாஜக. தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள அத்தனை கருப்பு பணத்தையும் ஒரே நாளில் வெறும் காகிதமாக மாற்றிக்காட்டி உள்ளார். அதை பொறுக்கமுடியாத பணமுதலைகள் இதற்கு எதிராக பேசுகிறார்கள். லஞ்சம் வாங்கி பணம் சேர்த்து வைத்தவர்கள் இதனால் கதிகலங்கி போய் உள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, வங்கி பணம் 2 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்டபோது அது யாருடையது என நீதிமன்றத்துக்கு சென்றார்.

ஆனால் இப்போது பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணம் பிடிக்கப்படாமல் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் யாரும் பாதிக்கப்படவில்லை. தவறு எந்தரூபத்தில் வந்தாலும் மத்திய அரசு அதனை தடுக்கும். கோவை மாவட்டத்தில் மட்டும் தபால் நிலையங்களில் ரூ.36 கோடி மாற்றப்பட்டுள்ளது. இதனை பார்க்கும்போது ஏழைகள் எங்கே பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தை பதுக்கிவைத்தவர்கள் தான் பதறுகிறார்கள். ஏழை, நடுத்தர வர்க்க மக்களை காப்பாற்றத்தான் இந்த நடவடிக்கை. மக்கள் நியாயமாக சம்பாதித்த பணத்தை மாற்றத்தான் கைவிரலில் மை வைக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு. கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்தவர்கள் அதனை காப்பாற்றாமல் விட்டு விட்டனர். மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி எடுத்துவருகிறது. அவரின் முயற்சிக்கு தமிழக பாஜக துணை நிற்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் தமிழக மீனவர்கள், இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மீனவர்கள் விடுதலை செய்யும்போது இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தாங்கள் செய்ததுபோல் போலியான கணக்கு காட்டப்படுகிறது.

பிரதமர் மோடியின் கரங்களில்தான் ஈழத்தமிழர்கள், மீனவர்கள் நலன் உள்ளது. பலமுறை மத்திய அரசு, இலங்கை ராணுவம் வரம்புமீறியதை கண்டித்துள்ளது. இனி தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தவது நடைபெறாமல் தடுக்கப்படும். காவிரிமேலாண்மை வாரியம் சட்டப்பூர்வமாக வரும். தமிழர்களின் உரிமை மறுக்கப்படாத வகையில் மேலாண்மை வாரியத்தை அமைக்க மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...