திமுக-வின் மன வியாதியை திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் நிச்சயம் குணப் படுத்துவார்

திருவாரூர் தெற்கு ரதவீதிக்கு, `கலைஞர் கருணாநிதி சாலை’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிய அளவில் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிக்குக் கருணாநிதி பெயரைச் சூட்டுவதா எனப் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்துபரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான், தெற்கு வீதிக்குக் கருணாநிதி பெயர் சூட்டும் முடிவைக் கைவிடக்கோரி, பாரதிய ஜனதா சார்பில் திருவாரூரில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆழித்தேர் ஓடும் வீதியில், `அரசியலைப் புகுத்தாதே… இந்தநாடு, இந்து நாடு’ என முழக்கங்களை எழுப்பினர்.

இதில் கண்டன உரையாற்றிய, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தின் நீண்டகால பண்பாட்டையும், கலாசாரத்தையும் மாற்றுவதற்கான முயற்சியில் தி.மு.க ஈடுபட்டுவருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இரு பெரும் சாதனைகளைச் செய்துவருகிறது. அதில் ஒன்று மத்திய அரசின் திட்டங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவது. மற்றொன்று ஊரின் பெயரைமாற்றுவது. திருவாரூர் தெற்குவீதிக்கு கருணாநிதி பெயரைவைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர் களுக்குத்தான் இந்தவியாதி வரும். காங்கிரஸ் கட்சி இந்த மனவியாதியில் 70 ஆண்டு காலமாக இருந்துவருகிறது. இதற்கு முற்றிலும் விதிவிலக்கான கட்சியாக பா.ஜனதா செயல்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆண்டுக்கு ரூ.44 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறார். ஆனால் ஒருதிட்டத்துக்குக் கூட அவர் தனது பெயரை வைத்தது இல்லை. நாட்டையும், மக்களையும் முன்னிலைப்படுத்தித்தான் பா.ஜ.க எப்போதும் செயல்படும்.

திமுக-வின் மன வியாதியை திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் நிச்சயம் குணப் படுத்துவார். தமிழகத்தில் சாலைவசதி இல்லாமல் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்துவருகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் ஒரு மலை பகுதியில் சாலை இல்லாமல் மக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். இதேபோன்று பலஊர்கள் உள்ளதால், அங்கெல்லாம் சாலை வசதியைச் செய்துகொடுத்து அவற்றுக்கு கருணாநிதி பெயரை வைக்கலாம்.

திருவாரூர் தெற்குவீதியின் பெயரை மாற்றமாட்டோம் என அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால்தான் இந்த பிரம்மாண்டான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம். இதனைமீறி திருவாரூர் தெற்கு வீதிக்குப் பெயர் மாற்றம் செய்யநினைத்தால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படாதளவுக்கு பா.ஜனதா முற்றுகை போராட்டம் நடத்தும்.

இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிஅமைக்கும். இலங்கையில் குடும்ப ஆட்சியின் காரணமாக அங்குள்ள அரசு சொத்துகள் கொள்ளையடிக்கப் பட்டு வந்ததால், அங்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், தற்போது குடும்ப ஆட்சி நடந்துவரும் தமிழகத்திலும் இதேநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் பிரதமர் நரேந்திரமோடி, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, அறிவாலயம் குடும்பம், சரத்பவார் குடும்பம், தாக்கரே குடும்பம் உள்ளிட்ட அனைத்து குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்.

பிரதமர் வீடுவழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து வீடுகட்ட நினைத்த திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் லஞ்சம் கேட்கப் பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பிரதமர், மக்கள் ஏழையாக இருக்ககூடாது, அவர்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதற்காக வீடுவழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினாலும், அதிலும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகின்ற தமிழக அரசுக்கும், எந்ததிட்டத்தில் எவ்வளவு பணம் கையாடல் செய்யலாம் என நினைப்பவர்களுக்கும் மத்தியில் ஒருஇளைஞரின் உயிர் பறிபோனது என்பது வேதனைக்குரியது. இந்த பிரச்னை குறித்து பிரதமரின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்’’ எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...