அறிவிப்பின் நோக்கம் நிறைவேறிய உடனே, அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தி கொள்ளப்படும்

ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நிலை விரைவில் சீராகும் என, நிதியமைச்சர் அருண்ஜேட்லி உறுதியளித்துள்ளார்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைதொடர்ந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பணதட்டுப்பாடு, அதைச்சமாளிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக, பாஜக சார்பில் ஆலோசிக்கப் பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மற்றும் இதர பாஜக மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

 

அப்போது பேசிய அருண்ஜேட்லி, ரூபாய் நோட்டுகள் சீர்திருத்தம் காரணமாக நாட்டில் சிறுவர்த்தகங்கள் பாதித்துள்ளதாகக் கூறினார். எனினும், இந்தபாதிப்பு தற்காலிகமான ஒன்று எனவும், வெகுவிரைவில் நிலை சீராகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் பணதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் வகையில், தேவையான ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று, அருண்ஜேட்லி தெரிவித்தார். இந்த அறிவிப்பின் நோக்கம் நிறைவேறிய உடனே, அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தி கொள்ளப்படும் என்பதால், விவசாயிகள், வர்த்தகர்கள் வருத்தப்பட வேண்டாம் என்றும் அருண்ஜேட்லி சுட்டிக்காட்டினார்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என பலதரப்பிலும் பெரும்மாற்றத்ததை ஏற்படுத்தும் முயற்சியாக, தற்போதைய ரூபாய் சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டுமக்கள், இதற்கான பலனை விரைவில் உணர்வார்கள் எனவும் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...