அனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருகிறது

ரூபாய் நோட்டுசெல்லாது என்ற அறிவிப்பு மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருப்பதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் 16ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த 6 நாட்களாக முடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று ராஜ்ய சபாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது ரூபாய் நோட்டு குறித்த விவாதம் நடைபெற்றது. என்றாலும் லோக் சபா 7வது நாளாக இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரூபாய்நோட்டு செல்லாது நடவடிக்கையில் மத்திய அரசு சரியானபாதையில் பயணித்து கொண்டிருக்கிறது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை முட்டாள்தனம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறதா என்றும் 2ஜி பிரச்சனையும் இதுவும் ஒன்று என்று எதிர்க்கட்சியினர் கருதுகிறார்களா என்றும் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் ஜெட்லி குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...