ஹவோலாக் தீவுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது

ஹவோலாக் தீவுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
அந்தமான், நிகோபார் தீவுகளில் நீல், ஹேவ்லாக் ஆகிய இருஇடங்களும் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரிகள் ஆகும். இங்கு உள்நாட்டில்இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் வந்து குவிகின்றனர்.இந்நிலையில் அந்தமானில் வங்ககடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயல்சின்னமாக மாறுகிற அபாயம் உள்ளது. இதையொட்டி மழை பெய்து வருகிறது. காற்றும் வேகமாக வீசி வருகிறது. இதன்காரணமாக நீல், ஹேவ்லாக் பகுதிகளில் முகாமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தவித்தனர். அவர்கள் எப்படி திரும்பிச் செல்வது என திகைத்து நின்றனர்.
 
இது குறித்து தகவல் அறிந்த சிவில்நிர்வாகம் அவர்களை பத்திரமாக மீட்குமாறு அந்தமான், நிகோபார் டிரை சர்வீஸ் கமாண்ட் படைப் பிரிவை கேட்டுக்கொண்டது. அதைத்தொடர்ந்து அவர்களை மீட்பதற்கான பணியை படையினர் நேற்று தொடங்கினர். ஹேவ்லாக்கில் இருந்து சுமார் 1100 சுற்றுலா பயணிகளும், நீல்தீவில் இருந்து சுமார் 400 பயணிகளும் மீட்கப்பட வேண்டும். மீட்கசென்ற கப்பல்கள் புயல் காரணமாக நங்கூரம் பாய்ச்ச முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், 1400 சுற்றுலாப்பயணிகளையும் மீட்கும்பணி நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது  டுவிட்டர் பக்கத்தில் ராஜ்நாத்சிங் கூறியிருப்பதாவது:- புயல் தீவிரம் குறைந்தும் அரசு உடனடியாக மீட்புபணிகளை துவங்கும். போர்ட் பிளேரில் குழுக்கள் தயாராக உள்ளது. புயலில் சிக்கியுள்ள பயணிகளின் குடும்பத்தினர் பீதி அடைய வேண்டாம். மீட்பு பணிகள் தொடர்பாக அந்தமான் ஆளுநரிடம் பேசியுள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...