துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமித் ஷா ஆய்வு

புதுதில்லியில் இன்று (13.07.2024) நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், “துடிப்பான கிராமங்கள்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு செய்தார். கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, எல்லையோர கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதிபூண்டு செயல்படுகிறது என்று தெரிவித்தார். எல்லையோர கிராமங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் கிராமங்களுடனான தொடர்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமித் ஷா வலியுறுத்தினார்.

எல்லைப் பகுதி கிராமங்களைச் சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுதக்காவல் படைகளும் (சிஏபிஎஃப்)  ராணுவமும், கூட்டுறவு அமைப்புகள் மூலம் உள்ளூர் விவசாயப்பொருட்களையும் கைவினைப்பொருட்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  ராணுவமும் ஆயுதப்படைகளும், அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில்  சுகாதார வசதிகள் தொடர்ந்து கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இப்பகுதிகளில் சூரிய சக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் எல்லையோர கிராமங்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ள மூத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைத் தொடருமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். எல்லையோர கிராமங்களில் இதுவரை 6000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றில் சுமார் 4000 சேவை வழங்கல் தொடர்பான நிகழ்ச்சிகள் எனவும் மற்றவை விழிப்புணர்வு முகாம்கள் எனவும் அவர் கூறினார். இந்த கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க 600-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அமைச்சர அமித் ஷா சுட்டிக் காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறைச்செயலாளர், இந்தோ திபெத் எல்லை காவல்படையின் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

‘துடிப்பான கிராமங்கள்’ திட்டத்தின் கீழ், 136 எல்லையோர கிராமங்களுக்கு 2,420 கோடி ரூபாய் செலவில் 113 சாலைத் திட்டங்கள் மூலம் போக்குவரத்து இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் 4 ஜி இணைப்பு விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2024 க்குள், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிராமங்களும் 4 ஜி இணைப்பு வரங்கப்படும். இந்தத் திட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிதி உள்ளடக்கத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய அஞ்சலக வங்கி சேவை வசதிகளும் இக்கிராமங்களில் செய்து தரப்படுகின்றன.

இந்த துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் வளர்ச்சியை அதிகரிக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில், சுற்றுலா அமைச்சகத்துடன் ஒருங்கணைந்து உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்த முக்கியமான  லட்சிய திட்டம் 14 பிப்ரவரி 2023 அன்று ரூ.4800 கோடி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...