செல்லாதநோட்டு அறிவிப்பு, மத்திய அரசின் சாதனை

செல்லாதநோட்டு அறிவிப்பு, மத்திய அரசின் சாதனை நடவடிக்கை' என, நிதியமைச்சர், அருண்ஜெட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, சமூக வலைதள மான, 'பேஸ்புக்'கில் கூறியுள்ளதாவது: செல்லாதநோட்டு அறிவிப்பால், இரண்டு மாதங்களாக, வங்கிகளில் காத்திருந்து மக்கள் அடைந்த கஷ்டம் நீங்கியுள்ளது; நிலைமை சீரடைந்துள்ளது. வழக்கமான பொருளாதார நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

இந்த நடவடிக்கையால், கறுப்புபணத்தை மீட்க முடியவில்லை என, சிலர் விமர்சிக்கின்றனர்.ஆனால், இவை வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்டதன் மூலம், பணத்தின் உரிமையாளர்கள் யார் என்ற விபரம்வெளிவந்து உள்ளது. இதன் மூலம், முடங்கி கிடந்தபணம் வங்கிக்கு திரும்பியுள்ளது.

வங்கியில் குவியும் பணம், மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். வங்கி வட்டிவிகிதம் குறையும். இதன் மூலம், மக்களுக்கு பயன்கிடைக்கும். முறைகேடாக வரிசெலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களை, இனிமேல் எளிதில் கண்டறிய முடியும்.

இந்த நடவடிக்கையை, வருமான வரித் துறை முடுக்கி விட்டுள்ளது. வரிவசூல் உயரும்போது, வரியின் அளவு குறையும்; இதுவும் மக்களுக்கு பயன் அளிக்கும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திவிகிதம் அதிகரிக்கும்.

நாட்டின் வளர்ச்சியை கருத்தில் வைத்தே, பொருளாதார சீர்திருத்தங்களை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கறுப்புபணத்தை மீட்பதில், உறுதியாக உள்ளோம்.

இந்த ஆண்டு முதல், ஜிஎஸ்டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி அமலுக்கு வருவதால், பெருமளவுவரி சீர்திருத்தம் நடக்கும். எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத் தங்களை எதிர்க்கின்றன; ஆனால், மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, எப்போதும் நாட்டின் வளர்ச்சியை பற்றிமட்டுமே சிந்திக்கிறார். ஆனால், காங்., துணை தலைவர் ராகுலோ, பார்லிமென்டை எப்படிமுடக்குவது என்பது குறித்து, மட்டுமே சிந்திக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...