டிஜிட்டல் இந்தியா, ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியாதிட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

குஜராத்தின் காந்திநகரில் ‘டிஜிட்டல் இந்தியாவாரம் 2022’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இதில் அவர் பேசியதாவது:

மக்களின் வாழ்க்கை முறையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியதில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியாதிட்டம் முக்கியப்பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்புச்சான்றிதழ், கட்டணம் செலுத்துதல், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை, தேர்வு முடிவுகள், வருமானவரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுதல், வங்கிசேவை உள்ளிட்டவற்றுக்காக வரிசையில் நின்று காத்திருந்தோம்.

ஆனால், டிஜிட்டல்வசதியை பயன்படுத்த தொடங்கியபிறகு வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்குவது முற்றிலும் ஒழிக்கப் பட்டுவிட்டது. டிஜிட்டல் இந்தியாதிட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது மட்டுமின்றி, இடைத் தரகர்களையும் ஒழித்துள்ளது.

தொழில்நுட்பத்தை முறையாக பயன் படுத்துவதே புரட்சியாகும். தொழில்நுட்பத்தை பெரியளவில் பயன்படுத்த பழகிக்கொள்ளவில்லை என்றால், காலம் நமக்காக காத்திருக்காது. தொழில் நுட்பத்தை பயன் படுத்துவதில் குஜராத் மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது.

21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா வாழ்வை எளிதாக்கி இருக்கிறது. இன்று கிராமங்களிலேயே மக்கள் பலசேவைகளை டிஜிட்டல் முறையில் பெற்று வருகின்றனர். ஆன்லைன் சேவைகள் காரணமாக இந்தியாவில் ஊழல் ஒழிந்துள்ளது. 4-வது தொழிற்புரட்சியை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது.

டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை கொண்டு வரப்பட்டபோது முன்னாள் நிதியமைச்சர் (ப.சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார் பிரதமர்) இந்தத்  திட்டம் எப்படி இங்கு சாத்தியமாகும். இங்கு போதிய செல்போன்களே இல்லை என்றார். அவர் அதிகம்படித்தவர். அவரே இப்படிப் பேசினார். ஆனால், கடந்த மே மாதத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1.2 லட்சம் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய் நிதி ஆன்லைன்மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.2.25 லட்சம் கோடி, தவறானவர்கள் கைகளில் கிடைப் பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசிசெலுத்தியவுடன் இந்தியா எப்படி சான்றிதழ் வழங்குகிறது என்று உலகமே வியந்து பேசிக்கொண்டிருக்க, சிலர் அந்த சான்றிதழில் ஏன் பிரதமர் மோடியின் படம் இருக்கிறது என கேள்விஎழுப்பினர்.

ஒருவர் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட உடனேயே அவரது செல்போனுக்கு சான்றிதழ் வந்துசேர்ந்துவிடுகிறது. இந்த வசதி டிஜிட்டல் புரட்சியால் வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...